Manavalan Karthar Yesu
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா
என் பிரியமே நீ ரூபவதி
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன்
1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்கும் காலம் வந்தததே (2)
திராட்சைச்செடி பூ பூத்து வாசம் பெருகுதே (2) – என் பிரியமே
2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே (2)
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு (2) – என் பிரியமே
3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு (2)
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு (2) – என் பிரியமே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.