Kaalathin Arumaiyai Arinthu
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தின் பரனுனை நாட்டின நோக்கத்தைச்
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் – கால
1. மதியை யிழந்துதீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ
கதியாம் ரஷண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்லகாலம் என்றறியாயோ – கால
2. இகத்தினில் ஊழியம்அகத்தியம் நிறைவேற
ஏசுனை அழைத்தாரல்லோ
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய் – கால
3. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின் அழித்தாரன்றோ
தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருடமுடியலாமே – கால
4. முந்தி எரேமியாஅனனியாவுக் குரைத்த
முடிவை நீ யறியாயோ
எந்தக் காலமும் சிரஞ்சீவியென் றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ – கால
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.