Wednesday 3 June 2020

Kaalathin Arumaiyai Arinthu காலத்தின் அருமையை அறிந்து


















Kaalathin Arumaiyai Arinthu காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே ஞாலத்தின் பரனுனை நாட்டின நோக்கத்தைச் சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் – கால 1. மதியை யிழந்துதீய வழியிலே நீ நடந்தால் வருங்கோபம் அறிந்திடாயோ கதியாம் ரஷண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட காலம் இதுவே நல்லகாலம் என்றறியாயோ – கால 2. இகத்தினில் ஊழியம்அகத்தியம் நிறைவேற ஏசுனை அழைத்தாரல்லோ மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால் பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய் – கால 3. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு நோக்கிப்பின் அழித்தாரன்றோ தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த தவணையின் காலமிவ் வருடமுடியலாமே – கால 4. முந்தி எரேமியாஅனனியாவுக் குரைத்த முடிவை நீ யறியாயோ எந்தக் காலமும் சிரஞ்சீவியென் றெண்ணிடாமல் ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ – கால

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.