Wednesday, 29 January 2020

Kartharaiye Thuthipaen கர்த்தரையே துதிப்பேன்

Kartharaiye Thuthipaen கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் என்றே பாடுவேன் – நான் 1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன் நெருங்கி வந்து குரலைக் கேட்டு விடுதலை கொடுத்தார் --- கர்த்தரையே 2. எனக்குதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார் எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன்--- கர்த்தரையே 3. எனது பெலனும் எனது மீட்பும் கீதமுமானார் நம்பியிருக்கும் கேடயமும் கோட்டையுமானார்--- கர்த்தரையே 4. கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை கடுகளவு பாவம் என்னை அணுக முடியாது --- கர்த்தரையே 5.வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்குச் செய்தாரே உயிரோடிருந்து உலகத்திற்கு எடுத்துச் சொல்லுவேன் --- கர்த்தரையே 6.வீடு கட்டுவோர் புறக்கணித்தது மூலைக் கல்லாயிற்று கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம் ஆச்சரியம் இது --- கர்த்தரையே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.