Sunday, 12 January 2020

Inba Yesuvaiye Thinam Thuthithiduven இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன்

Inba Yesuvaiye Thinam இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன் புகழ் பாடி மகிழ்ந்திடுவேன் இனிமை சுகமே அளித்தோர் அவரை பண்பாடி வாழ்த்திடுவேன் (2) --- இன்ப 1. கோரத்தின் எல்லைப் புயலினில் பேரலை வீசும் கடலினில் மாளும் பாவி என்னைத் தூக்கி தோளில் தாங்கி கரை சேர்த்தார் மகிபன் அருளின் வடிவாம் அவரை மகிழ்வாய் பாடுகிறேன் --- இன்ப 2. மாந்தர் கைவிட்ட வேளைதனில் மாமன்னன் யேசு சேர்த்துக் கொண்டார் ஜீவ ரத்த மதால் மீட்டார் தூய வாழ்வு தனைத் தந்தார் மகவாய் எடுத்தே அணைத்தார் கரத்தில் மகிழ்வாய் பாடுகிறேன் --- இன்ப 3. வானக வேந்தன் என்றென்றுமே வாழ்ந்திடத் தந்தேன் என்னுள்ளமே வான தூதர் போல நானும் வாழ்வு காண வாக்குத் தந்தார் வருவார் அழைப்பார் வானகம் செல்லுவேன் வல்லோனை வாழ்த்திடுவேன் --- இன்ப

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.