Inba Yesuvaiye Thinam Thuthithiduven இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன்
Inba Yesuvaiye Thinam
இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன்
புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்
இனிமை சுகமே அளித்தோர் அவரை
பண்பாடி வாழ்த்திடுவேன் (2) --- இன்ப
1. கோரத்தின் எல்லைப் புயலினில்
பேரலை வீசும் கடலினில்
மாளும் பாவி என்னைத் தூக்கி
தோளில் தாங்கி கரை சேர்த்தார்
மகிபன் அருளின் வடிவாம் அவரை
மகிழ்வாய் பாடுகிறேன் --- இன்ப
2. மாந்தர் கைவிட்ட வேளைதனில்
மாமன்னன் யேசு சேர்த்துக் கொண்டார்
ஜீவ ரத்த மதால் மீட்டார்
தூய வாழ்வு தனைத் தந்தார்
மகவாய் எடுத்தே அணைத்தார் கரத்தில்
மகிழ்வாய் பாடுகிறேன் --- இன்ப
3. வானக வேந்தன் என்றென்றுமே
வாழ்ந்திடத் தந்தேன் என்னுள்ளமே
வான தூதர் போல நானும்
வாழ்வு காண வாக்குத் தந்தார்
வருவார் அழைப்பார் வானகம் செல்லுவேன்
வல்லோனை வாழ்த்திடுவேன் --- இன்ப
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.