Thursday, 2 January 2020

Enthan Vanjai Paralogame எந்தன் வாஞ்சை பரலோகமே

Enthan Vanjai Paralogame எந்தன் வாஞ்சை பரலோகமே என்று சேர்ந்திடுவேன் என் நேசரை என் ராஜனை என்று நான் கண்டிடுவேன் 1. நேசர் தேசமதில் என்றும் பேரின்பமே கண்ணீரெல்லாம் மாறிடுமே என்றும் ஆனந்தமே --- எந்தன் 2. சாவின் கூர்மை யாவும் அழிந்து ஒழிந்ததே சஞ்சலமோ அங்கில்லையே நேசரை கண்டிடுவேன் --- எந்தன் 3. வீதி பொன் மயமே பாடியே மகிழுவேன் இராப்பகலோ அங்கில்லையே வெளிச்சம் இயேசு தானே --- எந்தன் 4. ஜீவ தண்ணீரினால் தாகம் தீர்த்திடுவார் உள்ளமெல்லாம் ஏங்கிடுதே என்று சேர்ந்திடுவேன் --- எந்தன் 5. தேவ அன்பதுவே நெருக்கி ஏவிடுதே பிரிக்கவோ ஏதுமில்லை அன்பரை சேர்ந்திடுவேன் --- எந்தன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.