Kartharin Panthiyil Vaa கர்த்தரின் பந்தியில் வா
Kartharin Panthiyil Vaa
கர்த்தரின் பந்தியில் வா சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி - கர்த்தரின்
1. ஜீவ அப்பம் அல்லோ கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ
பாவ மனங் கல்லோ உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட - கர்த்தரின்
2. தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு
பாவக் கேட்டைக் கூறு ராப்போசன பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே - கர்த்தரின்
3. அன்பின் விருந்தாமே கர்த்தருடன் ஐக்கியப் பந்தி யாமே
துன்பம் துயர் போமே இருதயம் சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.