Wednesday, 8 January 2020

Kartharin Panthiyil Vaa கர்த்தரின் பந்தியில் வா

Kartharin Panthiyil Vaa கர்த்தரின் பந்தியில் வா சகோதரா கர்த்தரின் பந்தியில் வா கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி - கர்த்தரின் 1. ஜீவ அப்பம் அல்லோ கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ பாவ மனங் கல்லோ உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட - கர்த்தரின் 2. தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு ராப்போசன பந்திதனில் சேரு சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே - கர்த்தரின் 3. அன்பின் விருந்தாமே கர்த்தருடன் ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமே இருதயம் சுத்த திடனாமே இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.