Vallamai Arul Niraive Varum வல்லமை அருள் நிறைவே வாரும்
Vallamai Arul Niraive Varum
வல்லமை அருள் நிறைவே வாரும்
பின்மாரி பொழிந்திடுமே
தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே
1. புது எண்ணெய் அபிஷேகம்
புது பெலன் அளித்திடுமே
நவ மொழியால் துதித்திடவே
வல்லமை அளித்திடுமே --- வல்லமை
2. உலர்ந்திடும் எலும்புகளும்
உயிர் பெற்று எழும்பிடவே
எழுப்புதலை கண்டிடவே
வல்லமை அளித்திடுமே --- வல்லமை
3. அக்கினி அபிஷேகம்
நுகத்தினை முறித்திடுமே
சத்துருவை ஜெயித்திடவே
சத்துவம் அளித்திடுமே --- வல்லமை
4. தூய நல் ஆவிதனை
துக்கமும் படுத்தாமல்
தூய வழி நடந்திடவே
பெலன் தந்து காத்திடுமே --- வல்லமை
5. சத்திய ஆவியே நீர்
நித்தமும் நடத்திடுமே
முத்திரையாய் அபிஷேகியும்
ஆவியின் அச்சாரமாய் --- வல்லமை
6. பெற்ற நல் ஆவிதனை
காத்திட வரம் தாரும்
ஆவியினால் நடந்திடவே
ஆளுகை செய்திடுமே --- வல்லமை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.