Wednesday, 22 January 2020

Aayiram Varuda Arasatchiyae ஆயிரம் வருட அரசாட்சியே

Aayiram Varuda Arasatchiyae ஆயிரம் வருட அரசாட்சியே பரிசுத்தவான்களின் இராஜ்ஜியமே பரமபிதா வேதவாக்கிதே பசுமை பொற்காலம் வருகின்றதே --- ஆயிரம் 1. பசுவும் கரடியும் கூடி மேயுமே புலியும் வெள்ளாடும் படுத்திருக்கும் ஒருமித்து நடக்கும் காளையும் சிங்கமும் ஒரு சிறு பையனே நடத்திடுவான் --- ஆயிரம் 2. இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லை இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும் குழந்தையின் கரங்கள் பாம்பின் மண்புதரில் களங்கம் பயமின்றி விளையாடுமே --- ஆயிரம் 3. வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே விருட்சங்கள் இனிய கனி தருமே அமைதியும் நிலவும் சுகவாழ்வு துளிர்க்கும் அற்பாயுசுள்ளோர்கள் அதில் இல்லையே --- ஆயிரம் 4. கிறிஸ்தேசு ராஜா புவியாளுவார் கிடைக்கும் நல்நீதி எளியவர்க்கே பரிபூர்ணம் அடைந்த மெய் தூய பக்தர்கள் பரனோடு நீடுழி அரசாளவே --- ஆயிரம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.