Saturday, 18 January 2020

Karthavin Janame Kaithalamudane கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

Karthavin Janame Kaithalamudane கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு அல்லேலூயா அல்லேலூயா (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி — கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே — அவர் நிதம் நம்மை நடத்துகின்றார் எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின் 3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு மன்னவன் பாதத்திலே பசிதாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா (2) — கர்த்தாவின்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.