Saturday, 30 November 2019
Paathai Kaatum Maa Yegovaa பாதை காட்டும் மாயெகோவா
Nal Meetper Patcham Nillum நல் மீட்பர் பட்சம் நில்லும்
Friday, 29 November 2019
Yesuvodu Sernthirupathenna Pakiam இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம்
Theivanbin Vellamae தெய்வன்பின் வெள்ளமே
Karthar Thuyar Thoniyai கர்த்தர் துயர் தொனியாய்
Wednesday, 27 November 2019
Kanaga Pathai Kadum Malaiyum கானகப் பாதை காடும் மலையும்
1.கானகப் பாதை காடும் மலையும்
காரிருளே சூழ்ந்திடினும்
மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன்செல்லுவாய்
பயப்படாதே கலங்கிடாதே
பாரில் ஏசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்
2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே
ஏசுவின் பின்னே நடந்தே
தூய பஸ்கா நீ புசித்தே
தேவ பெலனால் முன்செல்லுவாய் --- பயப்படாதே
3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்ரு சேனை மூழ்கி மாளும்
ஜெயம் சிறந்தே முன்செல்லுவாய் --- பயப்படாதே
4.குளிர்ந்த ஏலீம் பன்னீரூற்றும்
காணுவாய் பேரீச்சமரம்
கனமழையின் தாகம் தீர்த்து
மன்னா ருசித்து முன் செல்லுவாய் --- பயப்படாதே
5.கசந்த மாரா உன்னைக் கலக்கும்
கஷ்டத்தால் உன் கண் சொரியும்
பின் திரும்பிச் சோர்ந்திடாதே
நன்மை அருள்வார் முன்செல்லுவாய் --- பயப்படாதே
6.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
கோர யோர்தான் வந்தெதிர்க்கும்
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய் --- பயப்படாதே
7.புதுக்கனிகள் கானான் சிறப்பே
பாலும் தேனும் ஓடிடுமே
இந்தக் கானான் கால் மிதித்து
சொந்தம் அடைய முன்செல்லுவாய் ---- பயப்படாதே
Aanantha Geethangal Ennalum Paadi ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே – ஆனந்த
2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே – ஆனந்த
3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே – ஆனந்த
4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே – ஆனந்த
5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் – ஆனந்த
Yesu Palanai Piranthar இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு பாலனாய் பிறந்தார் (2)
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லனை மீதிலே பிறந்தார்
1.உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட --- இயேசு
2.விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானுடவதாரமாய்
தம்மைப் பலியாக தந்த ஒளி இவர்
தம்மைப் பணிந்திடுவோம் வாரும் --- இயேசு
3.ஓடி அலைந்திடும் பாவியை
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் --- இயேசு
4.கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் --- இயேசு
5.அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரைப் பணிவோம் வாரும் --- இயேசு
Tuesday, 26 November 2019
Yesuvin Pinnae Poga Thuninthen இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
1. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
2. உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
3. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
4. என் மீட்பர் பாதைஎன்றும் பின்செல்வேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
5. இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
6. நேசரின் சித்தம் செய்வதென் பாக்கியம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
7. செல்வேன் நான் வேகம் வெல்வேன் நான் கிரீடம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் (2)
Deva Devan Balakanai தேவ தேவன் பாலகனாய்
1.தேவ தேவன் பாலகனாய்
தேவ லோகம் துறந்தவராய்
மானிடரின் சாபம் நீங்க
மா நிலத்தில் அவதரித்தார்
அல்லேலூயா அல்லேலூயா
அற்புத பாலகன் இயேசுவுக்கே
2. பரம சேனை இரவில் தோன்றி
பாரில் ஆடி மகிழ்ந்திடவே
ஆ நிரையின் குடில் சிறக்க
ஆதவனாய் உதித்தனரே --- அல்லேலூயா
3. ஆயர் மனது அதிசயிக்க
பேயின் உள்ளம் நடுநடுங்க
தாயினும் மேல் அன்புள்ளவராய்
தயாபரன் தான் அவதரித்தார் --- அல்லேலூயா
4. லோகப்பாவம் சுமப்பதற்காய்
தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே
வேதம் நிறை வேற்றுதற்கோ
ஆதியாக அவதரித்தார் --- அல்லேலூயா
5. தாரகையாய் விளங்கிடவோ
பாரில் என்னை நடத்திடவோ
ஆருமில்லா என்னைத் தேடி
அண்ணலே நீர் ஆதரித்தீர் --- அல்லேலூயா
Monday, 25 November 2019
Yorthan Nathiyoram Thigaiyaathe யோர்தான் நதியோரம் திகையாதே
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனை யாலுன்னைக் கலக்காதே உள்ளமே
1.வெள்ளம் பெருகினும் வல்லமைக் குன்றாதே
வல்லவர் வாக்கென்றும் மாறிப் போகாதே - யோர்
2.வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே - யோர்
3.உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
துன்பமணுகாமல் துணையருள்வாரே - யோர்
4.கானானினோரமே காதலின் நாடதே
காணுவேன் தேசம் ஆ என்ன இன்பமே - யோர்
5.பால்தேனு மோடுதே பூரண அன்பதே
பாட்டினாலே அதைப் பகரலாகாதே - யோர்
6.ஜெபத்தினால் வல்லமை ஜெயம் பெற்றோர் நாடதே
ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே - யோர்
Sathiyamum Jeevanumai Nithamume சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே
1.சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்
கர்த்தனே எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்
வானந்திறந்தருளும் பல தானங்களையிந் நேரமதில்
வானவனே ஞானமுள்ள வல்ல குரு நாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்
2.என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனூற்றிடும்
இன்னும் இன்னும் ஈசனேயும் நல்வரங்கள் ஈந்திடும்
கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணி போல் காத்திடும்
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே - வானந்
3.சுய ஆடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமே
தயவு தாழ்மையினாவி தந்தருள வேணுமே
மாயமான யாவினின்றும் மனமதைப் பேணுமே
ஆயனே அடியார்களின் அடைக்கலமே - வானந்
4.அதிகமதிக அன்பில் அமிழ்ந்து அனுதினம்
புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட
அதிசயமே அகத்தின் குறைகளகற்றியே
இது சமயமுன்னத பெலனீந்திடும் - வானந்
Pirasannam Tharum Devane பிரசன்னம் தாரும் தேவனே
பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
பிரசன்னம் தாரும் தேவனே
1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன் சேராபீன் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்
2. நீரல்லால் இந்த பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடுமே
3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் ஈந்திடுமே
4. தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்
5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன்
Thuthi Thuthi En Maname துதி துதி என் மனமே
துதி துதி என் மனமே
துதிகட்குள் வசிப்பவரை -- எல்லா
நாட்களும் செய்திடும் நன்மைகளை நினைத்து
நன்றியுடன் பாடு மனமே அல்லேலூயா (2) --- துதி
1.அன்னையை போல அவர்
என்னை அரவணைத் தாற்றிடுவார்
அவர் அன்புள்ள மார்பதனில்
நான் இன்பமாக இளைப்பாறுவேன் (2) --- துதி
2.கஷ்டங்கள் வந்திடவே
நல்ல கர்த்தராம் துணை அவரே
துஷ்ட எதிரிகள் நடுவிலவர்
நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் (2) --- துதி
3.பாரங்கள் அமிழ்த்தினாலும்
தீரா வியாதியால் கலங்கினாலும்
அவர் காயத்தின் தழும்புகளால்
வியாதி தனை விலக்கிடுவார் (2) --- துதி
4.சகாய பர்வதமே
வல்ல கோட்டையும் அரணுமாமே
ஏதும் பயமொன்றும் வேண்டாமென்றால்
எந்த சேதமின்றி காக்கவல்லோன்(2) --- துதி
5.சிங்கமோ விரியன் பாம்போ
பால சிங்கமோ வலு சர்ப்பமோ
அதன் தலையதை நசுக்கிடவே
தக்க பலம் தருபவரே (2)--- துதி
Friday, 22 November 2019
Unnatha Thevanuke Magimai உன்னத தேவனுக்கே மகிமை
1.உன்னத தேவனுக்கே மகிமை
உலகில் சமாதானமாமே
காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே
பேரொளியாய் ஜெனித்தார்
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா துதியவர்க்கே
2.மானிடர் மேல் இவர்க் கன்பிதுவோ
மனுக்கோலமாய் மனுவேலனார்
மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
மாணொளியாய் ஜெனித்தார்
3.தாரகை என அவர் தோன்றிடவே
நேர் பாதையில் நடத்திடவே
தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
தன் ஒளியாய் ஜெனித்தார்
4.வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
வல்ல தேவனின் ஏக சுதன்
வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
வானொளியாய் ஜெனித்தார்
5.தாவீதின் வேர் இவராய் அவனின்
ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
தாம் உதித்தார் ஒளியாய்
Wednesday, 20 November 2019
Poorana Aaseer Polinthidume பூரண ஆசீர் பொழிந்திடுமே
1. பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே
வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே
2. ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்கினி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே
3. தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா
4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்
5. குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே
6. மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே
Tuesday, 19 November 2019
Maalayil Thuthipom Magilvudanae மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே
மாண்புகழ் இயேசுவை வானவரோடே
1.காலை மாலை உறங்காரே நம்
காவலனாய் இருப்பாரே
ஆவலுடன் துதி சாற்றிடுவீரே – மாலை
2.கிருபையின் வாக்கு தந்தாரே – அதை
அருமையாய் நிறைவேற்றினாரே
உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரே – மாலை
3.சோதனை வந்திட்ட நேரம் அவர்
போதனை செய்தார் அந்நேரம்
சாதனையாகவே நிற்கச் செய்தாரே – மாலை
4.அழைத்த மெய் அழைப்பிலே தானே – நாம்
உழைத்திட பெலன் தந்ததேனே
பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானே – மாலை
5.வயல் நிலம் ஏராளம் காட்டி – அதின்
அறுவடை தாராளம் ஏற்றி
அரிக்கட்டோடே வர கிருபை செய்தாரே – மாலை
6.ஆணி துளைத்திடதானே தன்னை
தியாகமாய் கொடுத்திட்ட தேனே
ஏகமாய் ஏசுவின் நாமத்தைத்தானே – மாலை
7. ஆயிரம் நாவிருந்தாலும் அவர்
அன்பைத் துதிக்கப் போதாது
பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம் – மாலை
8. உன்னதருக்கு மகிமை இந்தப்
பூமியிலே சமாதானம்
மனுஷரில் பிரியம் உண்டாகச் செய்தாரே – மாலை
Monday, 18 November 2019
Kirubai Emmai Soolnthu Kollum கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்
கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை
1.யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்
இயேசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை தேவ கிருபை
2. தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசர்கள் வேண்டிடுவோம் – கிருபை தேவ கிருபை
3. கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
காத்திருந்தே அடைவோம் – கிருபை தேவ கிருபை
4. ஆண்டுகள் நன்மையினால் – முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார் – கிருபை தேவ கிருபை
5. ஜாதி ஜனங்களையும் – வந்து
மோதி அசைத்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார் – கிருபை தேவ கிருபை
6. உண்மையும் நேர்மையுமாய் – இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை
Deva Janame Paadi Thuthipom தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்
1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனைத் துதித்திடுவோம்
2. வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம்
3. கர்த்தர் நாமம் ஓங்கிப் படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராய் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம்
4. தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம்
5. நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம்
Sunday, 17 November 2019
What a friend we have in Jesus
All our sins and griefs to bear
What a privilege to carry
Everything to God in prayer
Oh, what peace we often forfeit
Oh, what needless pain we bear
All because we do not carry
Everything to God in prayer
Have we trials and temptations
Is there trouble any where
We should never be discouraged
Take it to the Lord in prayer.
Can we find a friend so faithful
Who will all our sorrows share
Jesus knows our every weakness
Take it to the Lord in prayer
Are we weak and heavy laden
Cumbered with a load of care
Precious Savior, still our refuge
Take it to the Lord in prayer
Do your friends despise, forsake you
Take it to the Lord in prayer
In his arms he’ll take and shield you
You will find a solace there.
Yesuve Neer Nalla Nanpar யேசுவே நீர் நல்ல நண்பர்
1.யேசுவே நீர் நல்ல நண்பர்
பாவம் துக்கம் சுமந்தீர்
பாரம் முற்றும் நீக்க எந்தன்
வேண்டல் அன்பாய்க் கேட்கிறீர்
உந்தன் ஆவல் உணராமல்
சாந்தி முற்றும் இழந்தோம்
உந்தன் மீது வைத்திடாமல்
நோவு முற்றும் சுமந்தோம்
2. சோதனை போராட்டம் மிஞ்சித்
துன்பம் மூடும் வேளையில்
அஞ்சிடாதே யேசு நோக்கிக்
கெஞ்சி வேண்டிக் கொள்ளவே
உந்தன் துக்கம் தாங்கிக் கொள்ள
நண்பர் மீட்பரல்லவோ
உந்தன் சோர்பெல்லா மறிந்த
யேசுவண்டை ஓடி வா
3. பாரம் பொங்கிச் சோர்பு மிஞ்சி
ஆழ்த்தும் வேளை ஓடி வா
பாதுகாவல் யேசு தானே
வேறே தஞ்சமில்லையே
நண்பர் எல்லாம் கைவிட்டாலும்
யேசு சேர்த்துக் கொள்வாரே
மார்போடுன்னைச் சேர்த்தணைத்து
விண்ணில் வாழச் செய்குவார்
Kaalai Thorum Karthane Puthu காலை தோறும் கர்த்தனேபுது
காலை தோறும் கர்த்தனே-புது
கிருபையை தினம் பொழிகின்றீரே
காலை தோறும் கர்த்தனே
நம் தேவன் நல்லவரே
மாதேவன் வல்லவரே
உம் சமூகம் எனக்கானந்தமே (2) --- காலை
1. ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே --- காலை
2. ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மனதில் மறுரூபமாகிடுவேன் --- காலை
3. சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய் --- காலை
4. கனிமரமாய் நான் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர் --- காலை
5. ஜாதிகள் நடுவே உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர் --- காலை
Friday, 15 November 2019
Kartharai Padiye Potriduvomae கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனியநாமமதை
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரையில்லை அவரன்பு கரையற்றதே
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசுவைபோல் வேறு நேசரில்லையே
1.கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய்
வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார்
2.போரட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான்
ஜீவித்து சேவிக்க திடமளித்தார்
3.கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்
4.சீயோனில் சிறப்புடன் சேர்த்திட இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
முகமுகமாகவே காண்போமே அவரை
யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம்
Namathu Yesu Kiristhuvin Namam நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
1.நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்
தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்
2 அவரை நோக்கி கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார் --- தேவ
3 பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் --- தேவ
4 பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார் --- தேவ
5 நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில் --- தேவ
6.பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம் --- தேவ
Thursday, 14 November 2019
En Aathuma Nesa Meipare என் ஆத்தும நேச மேய்ப்பரே
1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டி சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் – 2
2. மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்
தன் ஆத்மத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் --- பேசும்
3. பாவிகட்கு உமது அன்பை
என் நடையால் காட்டச் செய்யும்
கல்வாரி அன்பால் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேகியும் --- பேசும்
4. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையே செல்லுவேன்
ஆசித்துத் தாறேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் --- பேசும்
Thuthipaen Thuthipaen Thuthipaen துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளவும் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
1.பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பைச் சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்
2.நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்
3.வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்
Wednesday, 13 November 2019
Potriduvom Pugalnthiduvom போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே (2)
1.தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெமைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நான் துதித்திடுவோம் – போற்றிடுவோம்
2. கன மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
கனலெரியின் சோதனையில்
கலங்கிடுமோ எம் விசுவாசமே – போற்றிடுவோம்
3.ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இணைத்தனரே நம்மைத் தன் சுதராய் – போற்றிடுவோம்
4.ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியாரை ஸ்திரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே – போற்றிடுவோம்
5.சீயோனே மாசாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தில் – போற்றிடுவோம்
Tuesday, 12 November 2019
Yesuvin Namathil Naam இயேசுவின் நாமத்தில் நாம்
இயேசுவின் நாமத்தில் நாம்
கூடிடும் சமயங்களில்
பேசுவார் தியானத்திலே
அவர் தம் கிருபைகள் அளிக்க
1.மலைகள் விலகினாலும்
மாபர்வதம் நிலைபெயர்ந்தும்
என்றும் மாறாத அவர் கிருபைகள்
தம் மக்களுக்காறுதலே --- இயேசுவின்
2.சீயோனில் அவர் நம்மையே
சிறுமந்தையாய் சேர்த்திடுவார்
நித்திய ராஜ்யத்தை தந்திடுவார்
சத்திய பாதையில் நடந்ததினால் --- இயேசுவின்
3.கஷ்டங்கள் கவலைகளில்
அன்புக்கரம் நம்மைத் தாங்கிடுமே
நஷ்டங்கள் மாறிடுமே
நாதன் இயேசுவின் நாமத்தினால் --- இயேசுவின்
Aanantha Padalgal Padiduven ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே – ஆனந்த
1.மேலாக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் – ஆனந்த
2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசு நாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
பாரதில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே --- ஆனந்த
3. கானானின் கரையிதோ காண்கின்றதே எந்தன்
காதலன் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக ஓட்டத்தை முடித்திடுவோம் – ஆனந்த
4. அற்புதமாம் அவர் நேசமது எந்தன்
பொற்பரன் சேவையென் சோகமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் - ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே --- ஆனந்த
5.அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில் – ஆனந்த
6. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம் – ஆனந்த
Monday, 11 November 2019
Thevanin Aalayame தேவனின் ஆலயமே
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே
1.இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்
தேவ பிள்ளைகளானோம் அவர் சொந்த ஜனமானோம்
2.நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே சரீரத்தின் சொந்தமானவர்
வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
பரிசுத்தம் காத்து கொள்வோம் பரிசுத்த ஜாதியாக
3.கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்
4.இயேசுவின் வருகை நெருங்கிடுதே
அவரின் பிரசன்னம் விரைந்திடுதே
மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே நாம்
மறுரூபமாகிடுவோம் மகிமையில் சேர்ந்திடுவோம்
Sunday, 10 November 2019
Yesu Devanai Thuthithiduvom இயேசு தேவனை துதித்திடுவோம்
இயேசு தேவனை துதித்திடுவோம்
இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்
இதயம் பொங்க நன்றியுடனே
போற்றி உயர்த்தி பணிந்திடுவோம்
1. வார்த்தை வடிவாய் வந்தவரை
வாதை பிணியைத் தீர்த்தவரை
கண்ணின் மணி போல் காத்த தயவை
கருணை உருவைத் துதித்திடுவோம்
2. அடிமை ரூபம் எடுத்தவரை
அகிலம் பணிந்திட செய்தவரை
உயர்ந்த நாமம் பெற்று விளங்கும்
உன்னதர் அவரைப் போற்றிடுவோம்
3. இருளை நீக்கும் மா ஜோதியாய்
உலகில் வந்த அருள் வடிவே
ஜீவ ஒளியாய் திகழும் அவரை
இன்றும் என்றும் துதித்திடுவோம்
4. தேவ தன்மையை வெளிப்படுத்த
தேவ மைந்தனாய் வந்தவரை
தேவ சுதராய் நாமும் விளங்க
கிருபை உருவைத் துதித்திடுவோம்
5. பாவ சாப மரணமதை
ஜெயித்து வென்று எழுந்தவரை
மகிமை சூழ திரும்பி வந்திடும்
வேந்தன் அவரைத் துதித்திடுவோம்
Friday, 8 November 2019
Kirubai Irakkam Nirainthavor கிருபை இரக்கம் நிறைந்தவோர்
1. கிருபை இரக்கம் நிறைந்தவோர்
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
தருணமேதும் எங்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே
கிருபையே பெருகுதே
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
என்ன என் பாக்கியமிதே
2. நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
நாதனோர் பாவமுமற்றவராய்
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
நல்ல ஆசாரியர் நமக்குண்டே
3. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
நல்கிடுவார் பரிபூரணமாய்
நாடுவோமே மாறா கிருபையை
நமக்காகவே அவர் ஜீவிப்பதால்
4. வானங்களின் வழியாய்ப் பரத்தில்
தானே சென்று இயேசுவா மெமது
மா பிரதான ஆசாரியரைப்
பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை
5. பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
சதாபரிந்து பேசியே நிற்போர்
இதோ எம்மையே முற்று முடிய
இரட்சிக்க வல்லமையுள்ளவரே
Potruvomae Potruvomae போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே (2) போற்றுவோமே
1.துங்கன் இயேசுவே துயா உமக்கே
துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்து போற்றி
எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி
மங்கிடாமலே தங்கிடவேணும் --- போற்றுவோமே
2.ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
அணைத்து எடுத்தோனே
ஆழிதனிலெம் பாவ மெறிந்த
அன்னை உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன்
மன்னவனையே மனதினிலே --- போற்றுவோமே
3.பாவம் போக்கியே கோபம் மாற்றியே
ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே
சுத்திகரித்த துய வேந்தனே
துயா நேயா காயமாற்றியே
கருணாநிதியே பரிகாரியே --- போற்றுவோமே
4.பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே
தாவி வந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட
அருள் நிறைந்தவனே
தரி சனம் தந்த தேவனே
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க --- போற்றுவோமே
5.பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திடக்
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே
கானம் பாடியே துதித்திடுவேன் --- போற்றுவோமே
Wednesday, 6 November 2019
Aayiram Sthothirame ஆயிரம் ஸ்தோத்திரமே
ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத் தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா
1. வாலிப நாட்களிலே
என்னைப் படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே
2. உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்
3. சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் தோல்விகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்
4. பலவித சோதனையை
சந்தோஷமாய் சகிப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்
5. இயேசுவின் நாமத்திலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ
Koda Kodi Sthothiram Padi கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே
சேற்றிலிருந்து தூக்கியெடுத்து
தேற்றி அணைத்துக் காத்துக் கொண்டாரே --- தேவசுதன்
1. பாவியை மீட்கப் பரன் சித்தங் கொண்டார்
பரலோகந் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ்வேழையைத் தேடி வந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ --- பூவுலகில்
2. தேவனின் சித்தம் செய்யும்படியாய்
தாசனின் கோலம் தாமெடுத்தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்
தம்மை பலியாய்த் தத்தம் செய்தாரே --- எந்தனுக்காய்
3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடு வராது காக்கும் நல்மேய்ப்பர்
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
இன்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் --- இறையவனை
4. தாவீது கோத்திர சிங்கமாய் வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக்குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன்மலையில் --- நித்தியமாய்
5. குயவனின் கையில் களிமண்ணைப் போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னை
காத்துக்கொள்ளும்படி கருணை கூர் ஐயா --- ஏழையென்னை
Sunday, 3 November 2019
Thuthi Geethame Padiye துதி கீதமே பாடியே
துதி கீதமே பாடியே
வாழ்த்தி வணங்கிடுவோம்
ஜோதியின் தேவனாம்
இயேசுவைப் பணிந்திடுவோம்
1.தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
தோளில் ஏந்தி சுமந்தனரே
சேதம் ஏதும் அணுகிடாமல்
காத்த தேவனைத் துதித்திடுவோம்
2.காரிருள் போன்ற வேளையில்
பாரில் நம்மைத் தேற்றினாரே
நம்பினோரைத் தாங்கும் தேவன்
இன்றும் என்றுமாய் துதித்திடுவோம்
3.பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
பாவம் யாவும் நீக்கினாரே
சொந்த இரத்தம் சிந்தி நம்மை
மீட்ட தேவனைத் துதித்திடுவோம்
4.கட்டுகள் யாவும் அறுத்துமே
கண்ணீர் கவலை அகற்றினாரே
துதியின் ஆடை அருளிச் செய்த
தேவ தேவனைத் துதித்திடுவோம்
5.வானத்தில் இயேசு தோன்றிடுவார்
ஆயத்தமாகி ஏகிடுவோம்
அன்பர் இயேசு சாயல் அடைந்து
என்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம்
Anpodu Emmai Poshikium அன்போடு எம்மைப் போஷிக்கும்
1. அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே.
2. கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.
3. மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும்;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.
4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.
5. இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.
Saturday, 2 November 2019
Thuthi Geethangalaal Pugalvaen துதி கீதங்களால் புகழ்வேன்
துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்துவங்களை
இயேசுவே இரட்சகா
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்
1. தினந்தோறும் உம் கானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால் --- துதி
2. அலைமோதும் இவ்வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும்போது
வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோடடியார்களை காருண்யத்தால் --- துதி
3. துன்ப துயரங்கள் வாட்டும்போது
வேத வசனங்கள் ஆறுதலே
சங்கீதங்களால் மகிழ் பாடிடுவேன்
உந்தன் வாக்குகளை எண்ணி ஆனந்தமாய் --- துதி
4. வானம் பூமியை படைத்தவரே
வாரும் என்று அழைக்கிறோமே
என்று வந்திடுவீர் ஆவல் தீர்ந்திடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால் --- துதி
Friday, 1 November 2019
Singasanathil Veetrirukkum சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை -2
கேரூபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே
இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை உடையவரே
அக்னிஜூவாலை போன்ற கண்களையும்
வெண்கலப் பாதங்களையும் உடையவரே
பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோல் உடையவரே
Kalvariye Kalvariye கல்வாரியே கல்வாரியே
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே
1. பாவி துரோகி சண்டாளன்
நானாயினும்
பாதகம் போக்கிப்
பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே
2. பாவியை மீட்கவே நாயகன்
இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச்
சிந்தின உன்னத – கல்வாரியே
3. நாதன் எனக்காக
ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன்
போல் தொங்கும் – கல்வாரியே
4. முள்முடி சூடியே கூராணி
மீதினில்
கள்ளனை போல என்
நாயகன் தொங்கிடும் – கல்வாரியே
5. சர்வம் படைத்தாளும்
சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய்
நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே
6. எண்ணும் நன்மை ஏதும்
என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர்
என்னை என் பொன் நாதா – கல்வாரியே
7. இவ்வித அன்பை யான்
எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு
ஏழையான் செய்குவேன் – கல்வாரியே
Subscribe to:
Posts (Atom)