புது கிருபை அளித்திடுமே
புகலிடமும் தந்திடுமே
புது ஜீவன் புது பெலனும்
எந்தன் இயேசுவே தந்திடுமே
1. பரதேசியாகத் திரிந்தேனையா
பாசமாய்த் தேடினீரே
இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்
இயேசுவே இரட்சகனே
2. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்
ஆண்டவர் அன்பினையே
வேண்டாதவைகளை விலக்கிடவே
உந்தன் வழிதனை போதியுமே
3. உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற
வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.