Tuesday, 3 August 2021

En Yesuvin Sanithiyil என் இயேசுவின் சந்நிதியில்


 

என் இயேசுவின் சந்நிதியில்

என்றும் கீதங்கள் பாடிடுவேன்

என்னைக் காத்திடுமே அவர் நாமமதே

துதி கீதங்கள் பாடிடுவேன்

 

1. கண்ணீர் அவர் துடைத்திடுவார்

தம் கரங்களால் தாங்கிடுவார்

எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே

எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே    - என்

 

2. பரமன் குரல் கேட்கும்போது

பரமானந்தம் அடைந்திடுவேன்

எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே

அதி சீக்கிரம் கிடைத்திடுமே   - என்

 

3. உலகை நம்பி சோர்ந்திடாதே

உன்னதத்தை நீ நம்பிடுவாய்

உந்தன் தேவைகள் அறியும் இயேசுவாலே

எல்லா பெலனும் கிடைத்திடுமே - என்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.