என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்
என்னைக் காத்திடுமே அவர் நாமமதே
துதி கீதங்கள் பாடிடுவேன்
1. கண்ணீர் அவர் துடைத்திடுவார்
தம் கரங்களால் தாங்கிடுவார்
எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே - என்
2. பரமன் குரல் கேட்கும்போது
பரமானந்தம் அடைந்திடுவேன்
எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே
அதி சீக்கிரம் கிடைத்திடுமே - என்
3. உலகை நம்பி சோர்ந்திடாதே
உன்னதத்தை நீ நம்பிடுவாய்
உந்தன் தேவைகள் அறியும் இயேசுவாலே
எல்லா பெலனும் கிடைத்திடுமே - என்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.