1.பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண சிநேகிதனுண்டே
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்பர் பாதம் தஞ்சமே
லோக துக்கம் துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்
2.கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பெலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச் சோர்வை
தீய குணம் மாற்றுவார்
3.பெலவீனமான போதும்
கிருபாசனமுண்டே
பந்து ஜனம் சாகும்போதும்
புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராணநேசா
உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா
உம்மை
நோக்கி கெஞ்சுவோம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.