Thursday 12 August 2021

Ekkaalathum Karthar எக்காலத்தும் கர்த்தர்


 

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

உயர்வோ தாழ்வோ எந்நிலையோ

எந்தன் தஞ்சம் இயேசுவே

 

1.மண்ணின் வாழ்வும் மாயையாகும்

மனிதன் காண்பது பொய்யாகும்

மாறிடா நேசர் இயேசுவே

மாறாத அன்பு என்றும் போதுமே

 

2.அலைகள் மோதி எதிர்வந்தாலும்

 கலங்கிடேனே வாழ்க்கையிலே

அசையா எந்தன் நம்பிக்கை

நங்கூரம் எந்தன் இயேசு போதுமே

 

3.அவரை நோக்கி ஜெபிக்கும்போது

அருகில் வந்து உதவிசெய்வார்

கைவிடாமல் கருத்துடன்

காத்தென்னை என்றும் நடத்திடுவார்

 

4.தேவ பயமே ஜீவ ஊற்று

மரண கண்ணிக்கு விலக்கிடுமே

தேவ பாதையில் நடந்திட

தேவாவியானவர் உதவி செய்வார்

 

5.முன்னறிந்து அழைத்த தேவன்

முடிவு வரையும் நடத்திடுவார்

தேவ சாயல் மாறியே

தேவாதி தேவனை தரிசிப்பேனே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.