Sunday 22 August 2021

Thiyangum Ullam kandaar தியங்கும் உள்ளம் கண்டார்


 

தியங்கும் உள்ளம் கண்டார்

தயக்கம் என்ன என்றார்

திகைக்கும் என் மனதில்

திரு வார்த்தை அருளித் தந்தார்

 

1. துதிப்பேன் என் கர்த்தரை

துதி சாற்றி மகிழ்ந்திடுவேன்

என்னைக் கண்டு மனதுருகும்

அன்பர் இயேசு என்அருகில் உண்டே

 

2. கதறும் ஆத்துமாவே

கலங்காதே என்றவரே

கலைமான்களும் கதறி அழும்

நீரோடையை  வாஞ்சிப்பதால்

 

3. அவர் என் கன்மலையே

அசையாத நல் பர்வதமே

அரும் பாவ உலகமதில்

அவர் அன்பதில் நிலைத்திருப்பேன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.