Wednesday 25 August 2021

Ummai Thuthipaen உம்மை துதிப்பேன்


 

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் அற்புதமானதே
உம்மைத் துதிப்பேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே

1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
என் நினைவுகளையும் தூரத்தில் அறிவீர்
என் நாவினிலே சொல் பிறவா முன்னமே
எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்

2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகலைப் போல் வெளிச்சமாகுதே
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
இந்த அறிவு ஆச்சரியமானதே

3. என்னை சோதித்து அறிந்து கொள்ளுமே
வேதனை வழி என்னின்று அகல
நித்திய வழி என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட

4. வானில் சென்றாலும் அங்கே இருக்கிறீர்
விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்
பாதாளத்திலே படுக்கை போட்டாலும்
உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.