வந்தாளும் இயேசுவே வாருமிதில் – தேவ
மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில்
1.பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே
சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே
இத்தினத்தில் இங்கு வந்திடும் – தேவா
2.நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும்
கல்வாரியின் அன்பையின்று கர்த்தனே நீர் காட்டியே
நற்குணம் அவர்க்கு நல்கிடும் – தேவா
3.சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும் தூசியும்
கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திட – தேவா
4.என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன் உத்தரம்
பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள்
காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமே – தேவா
5.சதா காலங்களிலும் இருப்பேனுங்கள் கூடவே
சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் மேற்கொள்ளாதென்றீர்
ஆதலாலனந்த ஸ்தோத்திரம் – தேவா
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.