Wednesday, 14 August 2019

Ummandai Thevane Naan உம்மண்டை தேவனே நான்

Ummandai Thevane Naan

1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்;
என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வதே

2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,
எந்தன் கனாவிலே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே இருப்பேனே

3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;
தூதர் அழைப்பாரே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேரவே

4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

5. சந்தோஷ சிறகால் வான்கடந்து
கோளங்கள் மேலாக நான் பறந்து
என் பாடல் இதுவே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.