எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார் (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)
1. பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் – ஆனந்தம்
2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்
3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்
4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்
5. இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.