Friday, 2 August 2019

Kartharin Kai Kurugavillai கர்த்தரின் கை குறுகவில்லை

Kartharin Kai Kurugavillai 

கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

1. பரிசுத்த ஆவியானவரே
பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
கிருபையிலே நாம் வளர்ந்திடுவோம்
வரங்களை நாடிடுவோம்

2. திருச்சபையே கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவார்

3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஐனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார்

4. மேகம் போன்ற வாக்குத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.