Monday, 26 August 2019

Entrum Aanantham என்றும் ஆனந்தம்

Entrum Aanantham

என்றும் ஆனந்தம்
என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்து கொண்டேயிருப்பேன்
            அல்லேலூயா ஆனந்தமே (2)
1.உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்    ----   அல்லேலூயா

2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்    ----   அல்லேலூயா

3. வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
துதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்    ----   அல்லேலூயா

4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல‌
அதிகாரம் எனக்குண்டு     ----   அல்லேலூயா

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.