Saturday, 3 August 2019

Koodaathathu Ontrumillaiye கூடாதது ஒன்றுமில்லையே

Koodaathathu onrumillayae

கூடாதது ஒன்றுமில்லையே
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே

கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே

நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே

பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே

லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே

வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.