Friday, 16 August 2019

Aanantham Aanantham Ananthame ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

Aanantham Aanantham Ananthame 

         ஆனந்தம் ஆனந்தம்  ஆனந்தமே
         அற்புத நாதர் நமக்களித்த
         அளவில்லா பரிசுத்த ஆவியாலே
         அன்பராம் இயேசுவை துதிப்பதாலே

1. இயற்கை எல்லாம் உம்மை துதிப்பதாலே   
   இந்த ஏழையின் ஜெபமும் கேட்டிடுமே
   தென்றலினால் மரம் செடியும்
   குலுங்கி குலுங்கி துதித்திடுதே

2.  கடலலையும் உம்மைப் பணிந்திடுதே
    கர்த்தர் சொல் கேட்கும் பெருங்காற்றும் போற்றிடுதே
    பக்தர்களும் பரவசத்தால்
    பாடுகின்றார் ஸ்தோத்திர கீதங்களே

3.  பறவைகளும் வானில் பறந்திடுதே
    மச்சங்கள் மகிழ்ந்து நீரில் நீந்திடுதே
   இஸ்ரவேலின் கூடாரத்தில்
  இரட்சிப்பின் தொனி தான் விழிக்குதே

4. கரம் பற்றி நாம் கீர்த்தனம் பண்ணிடுவோம்
    கர்த்தர் இயேசுவின் மகிமையை ஆர்ப்பரிப்போம்
   சீயோனிலே ராஜனையே
  சேவித்து சந்ததம் ஆனந்திப்போம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.