Wednesday, 2 October 2019

Thammandai Vantha Palarai தம்மண்டை வந்த பாலரை

Thammandai Vantha Palarai
1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.

2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.

3. குழந்தைகளுக் காகவும்
மரித்துயிர்த்த   ஆண்டவர்
சிறந்த நன்மை வரமும்
தரக்  காருண்ய முள்ளவர்

Logam Aalum Aandavar லோகம் ஆளும் ஆண்டவர்

Logam Aalum Aandavar
1. லோகம் ஆளும் ஆண்டவர்,
         ஆணும் பெண்ணும் செய்தனர்,
         இரு பேரும் வாழவே
        ஆசீர்வாதம் தந்தாரே.

     2. ஆதலால் விவாகமே
         மேன்மையுள்ள தாயிற்றே;
          இந்த நன்மைக்காகவும்
          ஸ்தோத்திரம் உண்டாகவும்.

       3. தேவ வாக்குக் கேற்றதாய்
           விசுவாச முள்ளோராய்
           நடப்போர்க்கு நன்மையே
           தவறா தளிப்பாரே.

       4. இந்த இரு பேரையும்
           கர்த்தரே கடாட்சியும்
          இவரால் புகழ்ச்சியே
          தேவரீர்க்குண்டாகவே.


Enthan Aathma Nesar Yesuvai எந்தன் ஆத்ம நேசர் இயேசுவை

Enthan Aathma Nesar Yesuvai
எந்தன் ஆத்ம நேசர் இயேசுவை 
பாவ பாரத்தோடு   நிற்கின்றோம்
இன்பமானாலும் துன்பமானாலும்
உந்தன் சிலுவை சுமந்து செல்வேனே

1. என் அந்தரங்க ஜீவியம்
கறை படிந்த சாவின் ஓவியம்
என் சாவின் பின் முதல்
உம்மைக் காணா நீசன் ஆவேனோ
என் ஆவியும் உம்மை சேராமல்
ஏங்கி அலைந்து திரியுமோ  தேவா  --- எந்தன்

2. உம்  ராஜரீக  நாளிலே
பரிசுத்தவான்கள் நடுவில்
உம்மைக்காணும் நான் தூர நிற்பேனோ
என்னை ஏற்றுக்கொள்ளும்  என் தேவா
யாதும் அற்றோனாய் எந்தன் பாவத்தை
நினைத்து  அழுது  நிற்பேனோ தேவா  --- எந்தன்

Enthan Ullathil Puthu Unarvu எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு

Enthan Ullathil Puthu Unarvu
1.எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு
எந்தன் வாழ்வினில் புதுமலர்ச்சி
எந்தன் நடை உடை பாவனை சொல் செயலும்
எந்தன் இயேசுவால் புதிதாயின

புதுவாழ்வு புது ஜீவன் புதுபாடல்
என்னை சந்தித்த இயேசு தந்தார்
ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன்
ஆண்டவர் சமூகத்தை அலங்கரிப்பேன்

2.கதரேனரின் கடற்கரையில் கல்லறையிடை
வாசம் செய்த பொல்லா ஆவி
நாதர் பாதம் பணிய நல்ல
அற்புத மாற்றம் பெற்றான்   --- புதுவாழ்வு

3.ஓடையில் உருண்டோடி வரும்
சின்னக் கற்களும் வடிவம் பெறும்
சின்னத் தாவீதுக்கும் கோலியாத்தை
வீழ்த்த கவண்கல் ஆயுதமாகிடும்  --- புதுவாழ்வு

4. கள்ளனும் கொள்ளைக்காரனான
குள்ளன் சகேயுவும் மீட்படைந்தான் 
உள்ளபடி யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான்
வெள்ளம் போல் மகிழ்வு பெற்றான்  --- புதுவாழ்வு

Neengatha Pavam Neengathatheno நீங்காத பாவம் நீங்காததேனோ

Neengatha Pavam Neengathatheno
நீங்காத பாவம் நீங்காததேனோ நீங்கிடும் நாள்தானிதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

1. காணாத ஆட்டை தேடி உன் நேசர் கண்டுன்னை சேர்த்திடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

2.என்பாவம் போக்கி என்னையும் மீட்டார் உன்னையும் மீட்டிடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

3.நினையாத நேரம் மரணம் சந்தித்தால் எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

Thambiye Kel Thangaiye Kel தம்பியே கேள் தங்கையே கேள்

Thambiye Kel Thangaiye Kel
தம்பியே கேள் தங்கையே கேள்
தேவனின் எச்சரிப்பை கவனித்து கேள்
எண்ணாகமம் முப்பத்திரண்டு
இருபத்தி மூன்றாம் வசனத்தைக் கேள்
உங்கள் பாவம் உங்களையே
தொடர்ந்து பிடிக்கும் என அறியுங்கள்
இயேசுவை உன் உள்ளத்தில் அழைத்தால்
பாவம் இனி உன்னை தொடர்ந்திடாதே

Nam Naduvathu Oru Puthu Ulagam நாம் நாடுவது ஒரு புது உலகம்

Nam Naduvathu Oru Puthu Ulagam
நாம் நாடுவது ஒரு புது உலகம்
அதை ஆளுவது  நம் இயேசு ராஜன்

1. வானில் எக்காளமதின் தொனி  முழங்கிடவே
என்னை அழைத்துச் செல்ல  அவர் வருவாரே
சிறையுற்றோர் மீட்படைவார்
சிறியோரும் பெரியோரும்  பணிந்திடுவார்  --- நாம் நாடுவது

2. விதை விதைப்பதில்லை  வயல் அறுப்பதில்லை
வீடு கட்டுவோரில்லை அந்த நாட்டினிலே
வாகனங்கள் நீதிமன்றம் கடைத் தெரு  யாவுமே
அங்கு இல்லையே  --- நாம் நாடுவது

3. மெய்  தேவன் அவரே ஒளி வீசிடுவார்
பரிசுத்தர் எனவே தூதர் வாழ்த்திடுவார்
இராஜாதி  ராஜாவுடன் என்றென்றும்
வாழ்ந்திடலாம்  அல்லேலூயா --- நாம் நாடுவது