இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது
1. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கின்றாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா
2. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார்
3. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளனைப்
போல
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பார் உனக்காய் அவர் கரங்கள்
பாரசிலுவை சுமந்தேகுதே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.