Sunday 16 January 2022

Aayiram Aayiram Kanagalal ஆயிரம் ஆயிரம் கானங்களால்


 


ஆயிரம் ஆயிரம் கானங்களால்

அதிசயமானவரைத் துதிப்பேன்

ஆனந்த கீதம் பாடிடுவேன் நான்

 

நல்லவர் இயேசு வல்லவர் அவர்

என்றென்றும் போதுமானவர்

நாடோறும் பாரங்கள் அகற்றிடுவார்

நன்றியால் துதித்திடுவேன்

 

1. வானதூத சேனைகளால் போற்றப்படும் பரிசுத்தரே

வான மகிமையை விட்டு மானிடனாய் பிறந்தவரே

வானிலும் பூவிலும் எந்தன் வாஞ்சை உந்தன் நாமமல்லோ

வாழ்த்திடுவேன் வணங்குவேன் துதித்திடுவேன் --- நல்லவர்

 

2. இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் செய்யும் தூயதேவனே

இரட்சகராய் எகிப்தில் தம் ஜனத்தை மீட்டுக்கொண்டீரே

செங்கடலோ சேனைகளோ நேரிடினும் பயமில்லை

சந்தோஷமாய் உம்மை என்றும் துதித்திடுவேன் --- நல்லவர்

 

3. ஆழ்கடலின் அலைகள் போல் சோதனைகள் பெருகிடினும்

அக்கினியால் என் விசுவாசம் சோதிக்கப்படும் வேளையிலும்

தாங்கியென்னைக் கரங்களில் தாய் நடத்தும் போல் அணைத்து

தேற்றிடும் கிருபைகட்காய் துதித்திடுவேன் --- நல்லவர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.