Tuesday, 25 January 2022

Kirubai Purinthenai Aal கிருபை புரிந்தெனை ஆள்


 

கிருபை புரிந்தெனை ஆள்நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள்நிதம்

1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து
வரில் நரனாகிய மாதுவின் வித்துகிருபை

2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து
நிண்ணயமாய் மிகவும் தயை வைத்துகிருபை

3. தந்திரவான் கடியின் சிறை மீட்டு
எந்தை மகிழ்ந்துன்றன் அன்பு பாராட்டுகிருபை

4.  தீமை உறும் பல  ஆசையை நீக்கி
ஸ்வாமி என்னை உமக்காலயம்  ஆக்கிகிருபை

5. தொல் வினையால் வரு சாபம் ஒழித்து
நல் வினையே செய் திராணி அளித்துகிருபை

6. அம்பர மீதுறை வானவர் போற்றக்
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்தகிருபை


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.