கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்
1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து
வரில் நரனாகிய மாதுவின் வித்து — கிருபை
2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து
நிண்ணயமாய் மிகவும் தயை வைத்து — கிருபை
3. தந்திரவான் கடியின்
சிறை மீட்டு
எந்தை மகிழ்ந்துன்றன் அன்பு பாராட்டு — கிருபை
4. தீமை
உறும் பல ஆசையை
நீக்கி
ஸ்வாமி என்னை உமக்காலயம் ஆக்கி
— கிருபை
5. தொல் வினையால் வரு சாபம் ஒழித்து
நல் வினையே செய் திராணி அளித்து — கிருபை
6. அம்பர மீதுறை வானவர் போற்றக்
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த — கிருபை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.