சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்
1. எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
ஜெயத்தைத் தந்திடுவார் - சேனை
2. சேனையின் கர்த்தரை நம்பிடுவோம்
பாக்கியம் அடைந்திடுவோம்
உயர்த்திடுவார் தாங்கிடுவார்
நன்மையால் நிரப்பிடுவார் - சேனை
3. எதிர்ப்பு ஏளனம் பெருகினாலும்
ஜெய கர்த்தர் நமக்குண்டு
ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம்
ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம் - சேனை
4. ஆவியின் வரத்தை தந்திடுவார்
ஆவியை பொழிந்திடுவார்
ஏகிடுவாய் எழும்பிடுவாய்
சீயோனில் சேர்ந்திடுவாய் - சேனை
5. சபையோரே நாம் எழும்பிடுவோம்
வசனத்தைப் பிடித்திடுவோம்
வென்றிடுவோம் சென்றிடுவோம்
ஊழியம் செய்திடுவோம் - சேனை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.