Friday 3 September 2021

Enna Thyagam En Kalvari Nayagaa என்னத் தியாகம் என் கல்வாரி நாயகா


 

என்னத் தியாகம் என் கல்வாரி நாயகா

 என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ

 

1. விண் தூதர் போற்றிடும் உம்

   பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே

  மாட்டுக் கொட்டிலை வாஞ்சித்தீரையா

  மானிடர் மேல் அன்பினால் - என்ன

 

2. ஜெனித்த நாள் முதலாய்

  கல்வாரியில் ஜீவனை ஈயும் வரை

  பாடுகள் யாவையும் பட்டீரையா

 பாவியை மீட்பதற்காய் - என்ன

 

3. தலையை சாய்த்திடவோ

   உமக்கு ஓர் ஸ்தலம் எங்குமில்லையே

   உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ

  முன் பாதை காட்டினீரே - என்ன

 

4. பாடுகளெல்லாம் உம்மை

   மகிமையில் பூரணமாய் சேர்த்ததே

  உம்மோடு நானும் பாடு சகிக்க

  என்ன தடையுமுண்டோ - என்ன

 

5. பொய் இன்பம் எனக்கினியேன்

என்னருமை இயேசுதான் என் பங்கல்லோ

நேசரின் பின்னே போகத் துணிந்தேன்

நேச வலிமையினால்என்ன

Pilavunda Malaiyae Pugalidam பிளவுண்ட மலையே புகலிடம்


 

1. பிளவுண்ட மலையே

புகலிடம் ஈயுமே

பக்கம் பட்ட காயமும்

பாய்ந்த செந்நீர் வெள்ளமும்

பாவதோஷம் யாவையும்

நீக்கும்படி அருளும்.

 

2. எந்தக் கிரியை செய்துமே

உந்தன் நீதி கிட்டாதே

கண்ணீர் நித்தம் சொரிந்தும்

கஷ்ட தவம் புரிந்தும்

பாவம் நீங்க மாட்டாதே

நீரே மீட்பர் இயேசுவே.

 

3. யாதுமற்ற ஏழை நான்

 நாதியற்ற நீசன் தான்

உம் சிலுவை தஞ்சமே 

உந்தன் நீதி ஆடையே

தூய ஊற்றை அண்டினேன்

தூய்மையாக்கேல் மாளுவேன்.

 

4. நிழல் போன்ற வாழ்விலே

கண்ணை மூடும் சாவிலே

கண்ணுக்கெட்டா லோகத்தில் 

நடுத்தீர்வை தினத்தில்

பிளவுண்ட மலையே 

Thursday 2 September 2021

Varum Ayya Pothagarae வாரும் ஐயா போதகரே


 

1. வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்

2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே வாரும் ஐயா
கழித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய்

3. நான் இருப்பேன் நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் தருவாய்

4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்கியம் அளித் தாண்டருள்வாய்

Wednesday 1 September 2021

Kartharin Satham Vallamaiullathu கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது


 

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா


1. பலவான்களின் புத்திரரே
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருககர்த்தரின்

2. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார்கர்த்தரின்

3. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப் பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீகமெங்கும் ஜொலிக்கும்கர்த்தரின்

4. பெண்மான்கள் ஈனும்படி
பலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமீந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார்கர்த்தரின்

Tuesday 31 August 2021

Puthu Kirubai Alithidume புது கிருபை அளித்திடுமே


 

புது கிருபை அளித்திடுமே

புகலிடமும் தந்திடுமே

புது ஜீவன் புது பெலனும்

எந்தன் இயேசுவே தந்திடுமே

 

1.  பரதேசியாகத் திரிந்தேனையா

  பாசமாய்த் தேடினீரே

 இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்

 இயேசுவே இரட்சகனே             

 

2. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்

ஆண்டவர் அன்பினையே

வேண்டாதவைகளை விலக்கிடவே

உந்தன் வழிதனை போதியுமே      

 

3.  உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற

வல்லமை தந்திடுமே

இம்மட்டும் காத்த இம்மானுவேலே

இனியும் நடத்திடுமே              

Monday 30 August 2021

Aatharam Neerthanaiya ஆதாரம் நீர்தானையா


 


ஆதாரம் நீர்தானையா

காலங்கள் மாற கவலைகள் தீர

காரணம் நீர்தானையா


1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்

கண்டேன் நான் இந்நாள் வரை

ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை

குழப்பம் தான்  நிறைகின்றது– ஆதாரம்


2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை

பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை

ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை

அமைதிதான் கலைகின்றது – ஆதாரம்


3. உந்தனின் சாட்சியாய் வாழ

உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை

உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்

சாட்சியாய் வாழ்ந்திடுவேன் – ஆதாரம்


Sunday 29 August 2021

Yesu Unnai Alaikirar இயேசு உன்னை அழைக்கிறார்


 

இயேசு உன்னை அழைக்கிறார்

இன்ப தொனி பின் வாராயோ

இன்னல் தீர்க்க வல்லவரை

இன்று நீ நம்பிடுவாய்

 

1. வருந்தி பாரங்கள் சுமந்த நீ

விரும்பி சிலுவை நோக்கியே பார்

அருமை ஆண்டவர் உனக்காக

சிறுமை அடைந்து உயிர் தந்தாரே

 

2. உன் கையில் நீ செய்த பாவத்திற்காய்

தன் கையில் ஆணிகள் பாய்ந்திடவே

முள் முடி சூடினார் உன் வினைக்காய்

மன்னிப்பு இரட்சண்யம் உனக்களிப்பார்

 

3. மனந்திரும்பி நீ மாறினாலோ

மறுபிறப்பை நீ கண்டடைவாய்

இயேசுவை உன் ஆத்ம இரட்சகராய்

ஏற்றுக்கொள் கிடைக்கும் சமாதானமே

 

4. வல்லமை உண்டவர் இரத்தத்திலே

வியாதியின் வேரும் கூரும் முறியும்

கர்த்தரின் காயங்கள் தழும்புகள்

சுத்தமாய் உன்னையும் குணமாக்கிடும்

 

5. சத்திய பரனே அழைக்கிறார்

நித்திய ஜீவனை ஈந்திடுவார்

இயேசுவாலாகாத தொன்றுமில்லை

இப்போதும் உன் தேவை வேண்டிக் கொள்வாய்