Thursday, 9 April 2020

Oppu Nigar illatha Kalvariye ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே

Oppu Nigar illatha Kalvariye 1. ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே ஒப்புரவை தந்திடும் கல்வாரியே ஒற்றுமையாய் பூவுலகம் ஒரு மிக்க பகை தீர்க்க ஓங்கியே நிற்கின்ற கல்வாரியே கல்வாரியே கல்வாரியே ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே 2. இறையன்பை பகர்ந்தூட்டும் கல்வாரியே இறைவனின் தியாகம் பார் கல்வாரியே இல்லார்க்கும் பொல்லார்க்கும் இயலாத பாவிக்கும் இறையருள் தந்திடும் கல்வாரியே 3. எல்லாரையும் ஏற்கும் கல்வாரியே பொல்லாரை மீட்டிடும் கல்வாரியே என் சாபம் நீக்கிட என் பாவம் போக்கிட நிலை வாழ்வை தந்திடும் கல்வாரியே

Wednesday, 8 April 2020

Kalvari Snegam கல்வாரி சிநேகம்

Kalvari Snegam கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும் குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் (2) கும்பிடுவோரை குணமாக்கும் வேதம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் (2) என்னை காணுவோர் உம்மை காணட்டும் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா நான் சிறுகவும் நீர் பெருகவும் (2) தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்

Thursday, 2 April 2020

Kalvari Katchiyai Kandum கல்வாரி காட்சியை கண்டும்

Kalvari Katchiyai Kandum கல்வாரி காட்சியை கண்டும் கல்நெஞ்சம் கரைந்திடாதோ பாவம் அற்ற பரிசுத்தர் பட்ட பாடுகள் எண்ணி உருகிடாதோ 1. கொடுங் கொல்கதா மலை மேட்டில் கோரப் பாடுகள் சகித்தார் பாரச் சிலுவை தோளில் சுமந்து தள்ளாடியே ஏறுகின்றார் திவ்ய நேசர் எடுத்திட்ட கோலம் எண்ணியே மனம் உருகிடாதோ 2. கை கால்கள் ஆணிகள் பாய திரு ரத்தம் வழிந்தோடுதே முட்கிரீடம் தலையில் குத்த வேதனையால் வாடுகின்றார் திவ்ய நேசர் படும் வேதனையை எண்ணியே மனம் கரைந்திடாதோ 3. ஐங்காயம் ஏற்றிட்ட நாதர் சிலுவையில் தொங்குகின்றார் தீய நிந்தனைகள் ஏற்றார் பரிகாசங்கள் சகித்தார் பாவம் போக்கும் பரிசுத்தர் பாதம் பணிந்தே மனம் கதறிடாதோ

Wednesday, 1 April 2020

Siluvai Oar Punitha Sinnam சிலுவை ஓர் புனிதச் சின்னம்

Siluvai Oar Punitha Sinnam சிலுவை ஓர் புனிதச் சின்னம் ஜெகத்து ரட்சகன் இயேசு மரித்துயிர்த்தெழுந்தார் – சிலுவை 1.கல்வாரியில் முளைத்து ககனம் வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்து இகபரத்தை இணைத்து இல்லாரைச் செல்வராக்கும் பொல்லாரை நல்லோராக்கும் நல்லாயன் இயேசு சுவாமி தோளில் சுமந்து சென்ற --- சிலுவை 2.அலகை சிரமுடைக்க அகந்தை நினைவழிக்க பலமயல்களகற்றப் பவக் கடலைக் கடக்க உலகில் உயிர்களோங்க உன்னத வாழ்வு பெற பலகுல மனிதரும் பகைத்துப்பின் போற்றுகின்ற --- சிலுவை 3.யூதர்க்கிடறலான இயேசு நாதர் சிலுவை கிரேக்க ஞானியருக்கு பைத்தியமச் சிலுவை அன்பர்க் கடைக்கலமும் தேவ பெலனும் சிலுவை தன்னை உணர்ந்தவர் தனிப்பெருமை சிலுவை - சிலுவை

Tuesday, 31 March 2020

Kolgatha Malai Meethilae கொல்கதா மலை மீதிலே

Kolgatha Malai Meethilae கொல்கதா மலை மீதிலே சிலுவை சுமந்தேகினார் உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் இரத்தம் சிந்தினார் 1. அந்தோ எருசலேமே ஆண்டவர் பவனி வந்தார் அந்த நாளை நீ மறந்தாய் அன்பரோ கண்ணீர் சிந்தினார் 2. மேனியில் கசையடிகள் எத்தனை வசை மொழிகள் அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் 3. உத்தம தேவ மைந்தனே சுத்தமாய் ரத்தம் சிந்தியே நித்திய வாழ்வு தனையே நீசனாம் எனக்களித்தார் 4. செந்நீரோ கண்ணீராய் மாறி தரணியில் பாய்ந்ததங்கே உன்நிலை நினைத்தவரே தன்நிலை மறந்து சகித்தார் 5. வஞ்சக உலகினிலே வணங்கா கழுத்துடனே வழிபோகும் ஆத்துமாவே வந்திடு நீ இயேசுவண்டை

Monday, 30 March 2020

Meetpar Yesu Kurusil மீட்பர் இயேசு குருசில்

Meetpar Yesu Kurusil மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே மூன்றாணி மீதில் காயம் அடைந்தே (2) 1. லோகப் பாவம் தீர்க்க பலியான தேவ ஆட்டுக் குட்டியானவர் சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில் 2. இயேசுவே கல்வாரி சிலுவையில் ஏறி ஜீவன் தந்திராவிடில் ஏழையான் என் பாவ பாரங்களை எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில் 3. தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ என்று இயேசு கதறினாரே பாவத்தால் பிதாவின் முகத்தையும் பார்க்கவும் முடியவில்லையோ – அவர் 4. அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே ஆச்சரிய தேவ அன்பைப் பாட – ஆயிரம் நாவுகள் போதுமோ – பதினாயிரம் 5. பாவ பாரம் லோகக் கவலைகள் தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும் தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத் தேற்றி ஆற்றித் தாங்குவார் அவர் – உன்னை 6. கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால் கல் மனமும் உருகிடுமே மாய லோக ஆசை வஞ்சிக்குமே மாறிடாத இயேசு போதுமே – என்றும்