Aathmame Un Aandavarin
1. ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து
அல்லேலுயா என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று
2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி
அல்லேலுயா அவர் உண்மை
மா மகிமையாம் துதி
3. தந்தை போல் மா தயை உள்ளோர்
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலுயா இன்னும் அவர்
அருள் விரிவானதே
4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவர் நீர் பக்தரே
அல்லேலுயா அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே
Paavikku Pugalidam Yesu Ratchagar
பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தாரே
1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தர் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கதா மலைக்கு இயேசுவை --- பாவி
2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுங்காயமும் அடைந்தாரே --- பாவி
3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக் கானும் உள்ளம் தாங்குமோ --- பாவி
4. உலகத்தின் இரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா --- பாவி
5. பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தர் இயேசுவண்டை ஓடி வா --- பாவி
6. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டையில் என்கிறார்
இளைப்பாறுதல் தரும் இயேசுவை
இன்று தேடி நம்பி வா --- பாவி
Kalvariyin Karunaiyithe
1. கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தன் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரேவிலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்விலாவினின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய்உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே2. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோஇவ்வன்புக் கிணையாகுமோஅன்னையிலும் அன்பு வைத்தேதம் ஜீவனை ஈந்தாரே3. சிந்தையிலே பாரங்களும்நிந்தைகள் ஏற்றவராய்தொங்குகின்றார் பாதகன் போல்மங்கா வாழ்வளிக்கவே4. எந்தனுக்காய் கல்வாரியில்இந்தப் பாடுகள் பட்டீர்தந்தையே உம் அன்பினையேசிந்தித்தே சேவை செய்வேன்5. மனுஷனை நீர் நினைக்கவும்அவனை விசாரிக்கவும்மண்ணில் அவன் எம்மாத்திரம்மன்னவா உம் தயவே
Siluvaiyil Araiyunda Yesuve
1. சிலுவையில் அறையுண்ட இயேசுவேஉம்மையே நோக்கி பார்க்கிறேன் என் பாவ சுமைகளோடு உம் பாத நிழலில் நிற்கிறேன் இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான்வீட்டில் என்னையும் சேருமே 2. தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்தார்கள் என்றீர் மாறாத இரக்கத்தால் என்னை மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே --- இயேசுவே 3. அம்மா இதோ உன் மகன் என்றீர்இதோ உன் தாய் என்றே நேசத்தால் அன்னையின் அன்பினில் நாளுமே என்னையும் வாழ்ந்திட செய்யுமே ---இயேசுவே 4. தாகமாய் உள்ளதே இறைவா ஏன் என்னை கை விட்டீர் என்றீரே கைவிடா நேசத்தால் எனக்கும் தாகம் மாற்றும் ஜீவநீரை தாருமே --- இயேசுவே 5. தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்னையும் உமது கரத்தில் முற்றிலும் கையளிக்கின்றேன் --- இயேசுவே