Thursday, 6 February 2020

Immanuvelin Ratha Ootratho இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ

Immanuvelin Ratha Ootratho இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ என் பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ அல்லேலூயா பாரதோ கல்வாரியிலே அதோ ஐந்தாறு கூடி ஓடுது அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2) 1. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே 2. பாவியான கள்ளனும் மா ஊற்றில் மூழ்கினான் பாவ மன்னிப் பானந்தமும் கண்டு பூரித்தான் 3. ஆவியில் நிறைத்து தேவ சாயலாக்கினார் தூய ரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார் 4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த ரத்தமே பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே

Yesuvin Naamathai Potriduvom இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்

Yesuvin Naamathai Potriduvom இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம் என்றும் அவர் துதி சாற்றிடுவோம் 1. கரடு முரடான பாதையினில் கால் தடுமாறி தியங்குகையில் கருணையாய் பேசி கரமதை நீட்டி காத்திடும் தயவதை பாடிடுவோம் 2. பாவத்தின் பாரத்தை நீக்கினாரே சாபத்தின் கோரத்தை போக்கினாரே சாகாது வாழ சாவதை வென்ற தேவகுமாரனை பாடிடுவோம் 3. யோர்தானை கடந்திடும் நேரமதில் அணைத்திடுவார் அவர் மார்பதனில் அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும் அன்பரின் நாமத்தை பாடிடுவோம்

Potriduvom Thuthithiduvom போற்றிடுவோம் துதித்திடுவோம்

Potriduvom Thuthithiduvom போற்றிடுவோம் துதித்திடுவோம் சேனையின் தேவனை பாடி மகிழ்வோம் பாடிடுவோம் கொண்டாடிடுவோம் அல்லேலூயா துதி அவர்க்கே - அல்லேலூயா 1. கடந்திட்ட நாட்களில் நம்மை காத்தவர் புதிதொரு நாளையும் நமக்கு தந்தார் யுத்தங்கள் வெள்ளங்கள் பூகம்பம் வந்தாலும் தேவன் நம்மைக் காத்துக் கொண்டார் 2. மேய்ப்பராய் நம்மையும் நடத்தி வந்தார் வாழ்வையும் நன்மையால் நிரப்பிடுவார் நமக்காக சிலுவையில் இரத்தமும் சிந்தியே தேவன் நம்மைக் மீட்டுக் கொண்டார் 3. நம்மையும் அவரிடம் ஒப்புக் கொடுப்போம் உலகத்தின் ஆசைகள் விட்டு விடுவோம் அவரோடு பரலோக வாழ்வினில் நாமும் என்றென்றும் வாழ்ந்திடுவோம்

Wednesday, 5 February 2020

Vaanathi Vaaname Potru வானாதி வானமே போற்று

Vaanathi Vaaname Potru வானாதி வானமே போற்று உன்னதங்களில் அவரைப் போற்று வானத்தின் சேனையேப் போற்று சூரிய சந்திரனே போற்று வானத்தின் விண்மீனேப் போற்று மேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3) 1. ஆழ்கடலின் மச்சமே போற்று ஆழத்தின் ஆழமே போற்று அக்கினியே கல்மழையே போற்று பெரும் காற்றே மழையே போற்று கனிதரும் மரமே போற்று உறைந்த மழையே பனியே போற்று போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3) 2. மிருகங்களின் கூட்டமே போற்று பிராணிகளின் கூட்டமே போற்று பறவைகளின் கூட்டமே போற்று பரிசுத்த ஜனமே போற்று பூமியின் குடியே போற்று இளம் வாலிபனே கன்னிகையே போற்று போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3)

Saturday, 1 February 2020

Ummai Paadaamal Yaarai Naan உம்மைப் பாடாமல் யாரை நான்

உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன் உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன் துதியும் உமக்கே அல்லேலூயா கனமும் உமக்கே அல்லேலூயா மகிமை உமக்கே அல்லேலூயா புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா 1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே உன்னத அனுபவம் தந்தீரே (2) --- உம்மைப் 2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர் துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர்(2) --- உம்மைப் 3. ஒன்றுக்கும் உதவாத என்னையும் உருவாக்கி உயர்த்தின தெய்வமே (2) --- உம்மைப் 4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் (2) --- உம்மைப்

En Maeipparaai Yesu என் மேய்ப்பராய் இயேசு

En Maeipparaai Yesu என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது 1. என்னை அவர் பசும்புல் பூமியிலே எந்நேரமும் நடத்திடும் போதினிலே என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம் ஆகா என்றென்றும் இன்பமல்லவா 2. என்னோடவர் நடந்திடும் போதினிலே எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி ஆகா எங்கெங்கும் ஒளியல்லவா 3. என்னையவர் அன்பால் நிரப்பியதால் எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால் என் உள்ளமே ஆகா என் தேவனை ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே

Aayiram Naavugal Pothaa ஆயிரம் நாவுகள் போதா

Aayiram Naavugal Pothaa ஆயிரம் நாவுகள் போதா ஆண்டவா உந்தனை பாட கணக்கில்லா நன்மைகள் செய்தீர் கர்த்தா உம்மை போற்றிப் பாட 1.காலமெல்லாம் உந்தன் அன்பால் கரம் பிடித்தென்னை நடத்தி காத்த உம் கிருபையை நினைத்தே கர்த்தா உம்மைப் போற்றிப் பாட --- ஆயிரம் 2. அலைமோதி ஆடும் படகாய் அலைந்த என்னை நீர் கண்டீர் ஆணிகள் பாய்ந்த உம் கைகள் ஆண்டு நடத்துமே தேவா --- ஆயிரம் 3. வானமும் பூமி ஆழ்கடலும் வல்லவா நீரே என சொல்ல வல்ல நல் தேவா உம் பாதம் வந்தேன் இயேசையா நான் ஏழை --- ஆயிரம் 4. உன்னதர் உம் வாக்கை நம்பி உம்மோடு என்றும் நான் வாழ ஊற்றும் உம் உன்னத பெலத்தை உம் சித்தம் செய்திடுவேன் நான் --- ஆயிரம்