Thursday, 6 February 2020

Potriduvom Thuthithiduvom போற்றிடுவோம் துதித்திடுவோம்

Potriduvom Thuthithiduvom போற்றிடுவோம் துதித்திடுவோம் சேனையின் தேவனை பாடி மகிழ்வோம் பாடிடுவோம் கொண்டாடிடுவோம் அல்லேலூயா துதி அவர்க்கே - அல்லேலூயா 1. கடந்திட்ட நாட்களில் நம்மை காத்தவர் புதிதொரு நாளையும் நமக்கு தந்தார் யுத்தங்கள் வெள்ளங்கள் பூகம்பம் வந்தாலும் தேவன் நம்மைக் காத்துக் கொண்டார் 2. மேய்ப்பராய் நம்மையும் நடத்தி வந்தார் வாழ்வையும் நன்மையால் நிரப்பிடுவார் நமக்காக சிலுவையில் இரத்தமும் சிந்தியே தேவன் நம்மைக் மீட்டுக் கொண்டார் 3. நம்மையும் அவரிடம் ஒப்புக் கொடுப்போம் உலகத்தின் ஆசைகள் விட்டு விடுவோம் அவரோடு பரலோக வாழ்வினில் நாமும் என்றென்றும் வாழ்ந்திடுவோம்

Wednesday, 5 February 2020

Vaanathi Vaaname Potru வானாதி வானமே போற்று

Vaanathi Vaaname Potru வானாதி வானமே போற்று உன்னதங்களில் அவரைப் போற்று வானத்தின் சேனையேப் போற்று சூரிய சந்திரனே போற்று வானத்தின் விண்மீனேப் போற்று மேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3) 1. ஆழ்கடலின் மச்சமே போற்று ஆழத்தின் ஆழமே போற்று அக்கினியே கல்மழையே போற்று பெரும் காற்றே மழையே போற்று கனிதரும் மரமே போற்று உறைந்த மழையே பனியே போற்று போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3) 2. மிருகங்களின் கூட்டமே போற்று பிராணிகளின் கூட்டமே போற்று பறவைகளின் கூட்டமே போற்று பரிசுத்த ஜனமே போற்று பூமியின் குடியே போற்று இளம் வாலிபனே கன்னிகையே போற்று போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3)

Saturday, 1 February 2020

Ummai Paadaamal Yaarai Naan உம்மைப் பாடாமல் யாரை நான்

உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன் உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன் துதியும் உமக்கே அல்லேலூயா கனமும் உமக்கே அல்லேலூயா மகிமை உமக்கே அல்லேலூயா புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா 1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே உன்னத அனுபவம் தந்தீரே (2) --- உம்மைப் 2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர் துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர்(2) --- உம்மைப் 3. ஒன்றுக்கும் உதவாத என்னையும் உருவாக்கி உயர்த்தின தெய்வமே (2) --- உம்மைப் 4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் (2) --- உம்மைப்

En Maeipparaai Yesu என் மேய்ப்பராய் இயேசு

En Maeipparaai Yesu என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது 1. என்னை அவர் பசும்புல் பூமியிலே எந்நேரமும் நடத்திடும் போதினிலே என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம் ஆகா என்றென்றும் இன்பமல்லவா 2. என்னோடவர் நடந்திடும் போதினிலே எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி ஆகா எங்கெங்கும் ஒளியல்லவா 3. என்னையவர் அன்பால் நிரப்பியதால் எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால் என் உள்ளமே ஆகா என் தேவனை ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே

Aayiram Naavugal Pothaa ஆயிரம் நாவுகள் போதா

Aayiram Naavugal Pothaa ஆயிரம் நாவுகள் போதா ஆண்டவா உந்தனை பாட கணக்கில்லா நன்மைகள் செய்தீர் கர்த்தா உம்மை போற்றிப் பாட 1.காலமெல்லாம் உந்தன் அன்பால் கரம் பிடித்தென்னை நடத்தி காத்த உம் கிருபையை நினைத்தே கர்த்தா உம்மைப் போற்றிப் பாட --- ஆயிரம் 2. அலைமோதி ஆடும் படகாய் அலைந்த என்னை நீர் கண்டீர் ஆணிகள் பாய்ந்த உம் கைகள் ஆண்டு நடத்துமே தேவா --- ஆயிரம் 3. வானமும் பூமி ஆழ்கடலும் வல்லவா நீரே என சொல்ல வல்ல நல் தேவா உம் பாதம் வந்தேன் இயேசையா நான் ஏழை --- ஆயிரம் 4. உன்னதர் உம் வாக்கை நம்பி உம்மோடு என்றும் நான் வாழ ஊற்றும் உம் உன்னத பெலத்தை உம் சித்தம் செய்திடுவேன் நான் --- ஆயிரம்

Vaanamum Boomiyum வானமும் பூமியும்

Vaanamum Boomiyum வானமும் பூமியும் மலைப் பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர் 1. சந்திர சூரியன் சகலமும் வணங்குதே எந்தனின் இதயமும் இன்பத்தால் பொங்குதே (2) உந்தனின் கிருபையை எண்ணவும் முடியாதே தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும் 2. பச்சை பசுமைகளும் பரமனை போற்றுதே பறவை இனங்களும் பாடித் துதிக்குதே (2) பக்தரின் உள்ளம் பரவசம் அடையுதே பரிசுத்த ஆண்டவர் நல்லவர் வல்லவர் – வானமும் 3. உடல் நலம் பெற்றதால் உள்ளமும் பொங்குதே கடல் போல காருண்யம் கண்டதால் துள்ளுதே (2) கடலலை இயேசுவின் பாதம் தழுவுதே திடமான ஆண்டவர் நல்லவர் வல்லவர் – வானமும்

Wednesday, 29 January 2020

Kartharaiye Thuthipaen கர்த்தரையே துதிப்பேன்

Kartharaiye Thuthipaen கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் என்றே பாடுவேன் – நான் 1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன் நெருங்கி வந்து குரலைக் கேட்டு விடுதலை கொடுத்தார் --- கர்த்தரையே 2. எனக்குதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார் எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன்--- கர்த்தரையே 3. எனது பெலனும் எனது மீட்பும் கீதமுமானார் நம்பியிருக்கும் கேடயமும் கோட்டையுமானார்--- கர்த்தரையே 4. கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை கடுகளவு பாவம் என்னை அணுக முடியாது --- கர்த்தரையே 5.வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்குச் செய்தாரே உயிரோடிருந்து உலகத்திற்கு எடுத்துச் சொல்லுவேன் --- கர்த்தரையே 6.வீடு கட்டுவோர் புறக்கணித்தது மூலைக் கல்லாயிற்று கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம் ஆச்சரியம் இது --- கர்த்தரையே