Wednesday, 25 September 2019

Valvinile Oli Veesida Vanavar வாழ்வினிலே ஒளி வீசிட வானவர்

Valvinile Oli Veesida Vanavar
1.வாழ்வினிலே  ஒளி வீசிட வானவர் பிறந்தனரே
வாழ்க்கையிலே இருள் அகல தூயவன்  உதித்தனரே
 ஆதித் தந்தை ஆதாம் ஏவாள் பாவம் போக்கிடவே
ஜோதித்  திரு தேவபாலன்  ஜோதியாய் அவதரித்தார்

கன்னியின் பாலனாய் முன்னணையில் நிலமிதில்  பிறந்தனரே
போற்றிடுவோம்  போற்றிடுவோம் இறைவனைப்  போற்றிடுவோம்

2. அன்னாளும் சிமியோனும் ஆர்வமாய் சென்றேகி
பொன்னான பாலனையே கண்டு மகிழ்ந்தனரே
விண்ணோரும் மண்ணோரும் புகழ்ந்து சாற்றிடவே
விண்ணின் மணி புல்லணையில் அழகுடன் தவழ்ந்தாரே

3. ஏதேனெனும்  தோட்டத்திலே ஏவையால்  வந்த வினை
எந்நாளும் ஓங்காமலே அன்றலன் அகற்றிடவே
பூதலத்தில்  புண்ணியமாய் கிருபைகள் செய்திடவே
பூவுலகில் புனிதமான ஆசிகள் அளித்திடுவோம்

4. மாடடையும் கொட்டிலிதில் மானிடன் தோன்றினாரே
கேடுகளை நீக்கிடவே காவலன் உதித்தனரே
பாவிகளாம்  மாந்தர்களை பரிசுத்தமாக்கிடவே
பாவிகளின் நேசர் அவர் பாரினில் அவதரித்தார்

Aararo Ariraro Deva Paalanuku Ariraro ஆராரோ ஆரிரரோ

Aararo Ariraro Deva Paalanuku Ariraro
ஆராரோ  ஆரிரரோ
தேவ பாலனுக்கு  ஆரிரரோ  (2)

1. ஆவகம்  பூத்த விடிவெள்ளிக்  கதிர்கள் ஆரவத் தலை நசுக்கும் 
என்று வான் தூதர் மொழிந்தார்
கானாயர் மிளிர்ந்த கன்னியின் பாலனுக்கே  --- ஆராரோ

2. ஆலோசனை மிகும் கர்த்தரின் தத்துவம் அதிசயம் அதிசயமே
இவர் அற்புதப் பாலகன்
இம்மானுவேலனாம்  தாவீதின் பாலனுக்கே  --- ஆராரோ

3. ஏழையின் பாவம் எட்டி உதைக்கவும் எளியோனை ரட்சிக்கவும்
தயை செய்தே இப் பூவகக்  காரிருள் நீக்கிடும்
மெய்  தேவ  பாலனுக்கே   --- ஆராரோ

4. தூபமாய் ஜெபமாய் போளமாயிருதயம் உனதடிக்கேப்  படைத்தேன்
சொந்தம் ஊற்றியே பொன்னகை சோலையில்
பிறந்திடும்  உன்னதன் பாலனுக்கே   --- ஆராரோ

Than Van Mathi Vin Meenodu தன் வான் மதி விண் மீனொடு

Than Van Mathi Vin Meenodu
தன்  வான் மதி விண்  மீனொடு
தாலாட்டுது  இன்பமாய் தூங்குவாய்

1. மெல்லிமை மூடிடு  கண்மணி விண்ணவர் பாடிடத்  தூங்குவாய்
வாடை வீசும் அந்தி நேரம் ஆடை  இன்றி தவிக்கும் நேரம்
ஆக்களுடைய சத்தத்துக்குள்  அழுது பிறந்தார்  --- தன்

2. கல்லணை உந்தனுக்கு தொட்டிலோ புல்லணை உந்தனுக்கு மெத்தையோ
மாட்டுக்கொட்டில் மாளிகையோ பாட்டுப் பாட தூதரோ
ஜோதி விண்மீன் உந்தனுக்கு  அகல் விளக்கோ  --- தன்

3. ஆரிரோ ஆரிரோ  ஆரிரோ ஆரிரோ ஆரிரோ தூங்குவாய்
காரிருளில் கடுங் குளிர் சேரும் இந்த நேரமிதில்
ஆரும் துணை இல்லையென்று அழுகின்றாயோ  --- தன்

Christmas Valthal Koorugintrom கிறிஸ்மஸ் வாழ்த்தல் கூறுகின்றோம்

Christmas Valthal Koorugintrom
கிறிஸ்மஸ்  வாழ்த்தல் கூறுகின்றோம் 
பரிசுத்தர்  பிறந்த தினமிதுவாம்  திரு
மைந்தன் மானிடனாயுதித்தார்
மகிமையை வெறுத்து புவிதனிலே
       
        வான ரடி  பணி   நாதா நர குரு
        வான கனி மரி  தேனே கழல் சரண்

1. மந்தை ஆயர்கள் தேடி வர  கன
விந்தை ஞானியர் உவந்து வர பல
மைந்தர் எமையே  சந்தித்திட
சுந்தரன் கந்தையை போர்த்துக் கொண்டார்  --- வான

2. ஆதி கிருபாசனம்  துறந்து
அழகான மோட்சம் அதை மறந்து
மனு ஜோதிக்கு  பதேத் துணர்ந்த 
ஜோதி மனு உருவாய் வந்தார்  --- வான

3. மானிடர்களை வான் சேர்க்க கனி
மரியின் மடியில் மகிழ்ந்துதித்து கனி
வினையைத் தீர்த்திட விண்ணை விட்டு
வந்தார் மண்ணின் முன்னணையில்   --- வான

Mannavan Yesu Manidanai மன்னவன் இயேசு மானிடனாய்

Mannavan Yesu Manidanai
மன்னவன் இயேசு மானிடனாய்
மனுவை மீட்க தோன்றினாரே

1. பாரெல்லாம் படைத்தீர் ஒற்றையாலே
பாலகர் தம்மையும் தள்ளினாரே
ஆரிரோ என்ற என் தாய் உள்ளத்தை
வாரீரோ உன்னை என் வீடாக்கினார்  --- மன்னவன்

2. கந்தை என் வீதியில் கலைத்திட
கந்தை உடை தனை  தரித்தாரே
விந்தையில் நீர் சித்தம் மஞ்சம் தந்து
மந்தைக்குள் நீர் நின்று பேசிடவே   --- மன்னவன்

3. மூன்று ஜோடிகள் பிடித்திங்கு
மூன்றிலொன்றோனை பணிந்தன
ஞானிகள் ஞானத்தையாக மாற்றி
ஆவிக்குள் ஞானமும் பெலனுமாய்  --- மன்னவன்

Tuesday, 24 September 2019

Motcha Yaathirai Selgirom மோட்ச யாத்திரை செல்கிறோம்

Motcha Yaathirai Selgirom
1.மோட்ச யாத்திரை செல்கிறோம்
மேலோக வாசிகள் – இம்மாய லோகம்
தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து செல்கிறோம் கரையின் ஓரமே
காத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம்

ஆனந்தமே  ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் வாழுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

2.சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்
நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே   --- ஆனந்தமே 

3.அள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் --- ஆனந்தமே 

4.மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்  --- ஆனந்தமே 

5.கர்த்தர் என் அடைக்கலம் கவலை
இல்லையே – இக்கட்டு துன்ப
நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்  --- ஆனந்தமே 

Alagai Nirkum Yaar Ivargal அழகாய் நிற்கும் யார் இவர்கள்

Alagai Nirkum Yaar Ivargal
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 
            சரணங்கள்

1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர் — அழகாய்

2. காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் — அழகாய்

3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய்

4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்

5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் பிதாவின்  முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று — அழகாய்

6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை — அழகாய்