வென்றனரே நம் இயேசு பரன்
என்றென்றும் ஜெயித்தெழுந்தார்
ஜெயமே அடைந்துமே
இரட்சகரில் வளருவோம் – வென்றனரே
1. சேதமேதும் நெருங்கிடா
தேவ தேவன் தாங்குவார்
துன்பம் யாவும் நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும் – வென்றனரே
2. தீங்கு நாளில் மறைத்துமே
சுகமாய் காத்து மூடுவார்
தகுந்த வேளை கரத்தினில்
உயர்த்தி ஜெயமே நல்குவார் – வென்றனரே
3. தேவனோடு செல்லுவேன்
மதிலைத் தாண்டி பாயுவேன்
உலகை ஜெயிக்கும் தேவனால்
யாவும் ஜெயித்து செல்லுவேன் – வென்றனரே
4. நீதிமானை உயர்த்துவார்
நீதிபரனாம் இயேசுவே
சத்துரு வீழ்ந்து அழிந்திட
தேவன் ஜெயமே தந்திடுவார் – வென்றனரே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.