Monday 13 December 2021

Ummai Nambi Vanthaen உம்மை நம்பி வந்தேன்


 

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல

உம் தயை என்னைக் கைவிடல

வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்

இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்

 

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே

உம்மைத் துதிப்பேன்

 

1. காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்

கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்

உடன்படிக்கை என்னோடு செய்து

இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்  ஏல்

 

2. வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்

வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர்

பரதேசியாய் நான் தங்கினதை

சுதந்திரமாக மாற்றித் தந்தீர்  ஏல்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.