பேசும் தெய்வம்
நீர்
பேசாத கல்லோ
மரமோ நீர் அல்ல
1.என்னைப்
படைத்தவர் நீர்
என்னை வளர்த்தவர்
நீர்
என் பாவம்
நீக்கி என்னைக் குணமாக்கி
என்னோடிருப்பவர்
நீர் – இயேசுவே (4) – பேசும்
2.என் பாரம்
சுமப்பவர் நீர்
என் தாகம்
தீர்ப்பவர் நீர்
என்னைப் போஷித்து
என்னை உடுத்தி
என்னோடிருப்பவர்
நீர் – இயேசுவே (4) – பேசும்
3.என் குடும்ப
வைத்தியர் நீர்
ஏற்ற நல் ஔஷதம்
நீர்
எந்தன் வியாதி
பெலவீனங்களில்
என்னோடிருப்பவர்
நீர் – இயேசுவே (4) – பேசும்
4.என்னை அழைத்தவர்
நீர்
என்றும் நடத்திடுவீர்
என் மேல் கண்
வைத்து ஆலோசனை தந்து
என்னோடிருப்பவர்
நீர் – இயேசுவே (4) – பேசும்
5.எனக்காய்
வருபவர் நீர்
என் கண்ணீர்
துடைப்பவர் நீர்
எல்லாம் முடித்து
சீயோனில் சேர்த்து
என்னோடிருப்பவர்
நீர் – இயேசுவே (4) – பேசும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.