Sunday 19 December 2021

Aasaiyai Kooduvom ஆசையாய்க் கூடுவோம்


 


1. ஆசையாய்க் கூடுவோம்

அன்புடன் பாடுவோம்

ஈசனார் தம் நேசமாக

வீந்ததைக் கொண்டாடுவோம்

 

மா சந்தோசம் மா கெம்பீரம்

மாந்தர் நாமெல்லாருக்கும்

மாட்சியுறும் காட்சி காண

வாரும் பெத்லகேமுக்கு

 

2. முன்னணை மீதினில்

சின்னவோர் பாலனாய்

உன்னதனொரே குமாரன்

ஒய்யாரமாய் தோன்றினார்

 

3. ரூபமில்லாதவர்

சோபித பூரணர்

சாபம் நிறை பாவ மாம்ச

ரூபெடுத்து வந்தனர்

 

4. தேசுறை பாலகர்

ஜேசென்னும் பேரினர்

மாசு திகில் நீக்கி நம்மை

மீட்க மனுவாயினர்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.