Yesuve Manalane
இயேசுவே மணாளனே – என்
நம்பிக்கையின் தீபமே
என் ஆசை ஒன்று மாத்திரமே
விண் வீட்டில் உம்மைக் காண்பதே
காணுவேன், காணுவேன்
நேசரை நான் காணுவேன்
அந்நிய கண்களாலே அல்ல
சொந்த கண்ணால் காணுவேன்
1. கண்ணீரின் பள்ளத்தாக்கிதே
உம்மில் மறைந்தே வாழுவேன்
கண் மூடும் நொடி நேரத்தில்
சேர்வேன் நான் பியூலா தீரத்தில் – காணுவேன்
2. மேகம் எழும்பி செல்லுதே
கானானின் ஓரம் காணுதே
ஆசாபாசம் ஆகும் கட்டையே
அறுத்தெறிந்திடுவோமே – காணுவேன்
3. மண்ணில் மறைந்த சுத்தரும்
மண் மீது வாழும் சித்தரும்
விண்ணில் எக்காளம் கேட்கையில்
வேகம் செல்வாரே மேகத்தில் – காணுவேன்
4. உயர்த்தெழும்பும் காலையில்
தூதர் சங்கீதம் கேட்கையில்
தங்க கிரீட கூட்டத்தில்
என்பேர் அழைக்கும் நேரத்தில் – காணுவேன்
5. என் ஓட்டமும் பிரயாசமும்
நான் காத்த என் விசுவாசமும்
வீணல்ல அது சத்தியம்
நேசரைக் காண்பேன் நித்தியம் – காணுவேன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.