Devanbai Kaankirom Aananthamae
1. தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே அவர்தாம் கொடுத்த வேதத்திலே வேதத்தின் மாட்சிமை யாவிலுமே இயேசுவின் அன்புதான் பேரின்பமே ஆனந்தம் இயேசு அன்பு வைத்தார் என் மேலுமே அன்பு வைத்தார் ஆனந்தம் இயேசு அன்பு வைத்தார் என் மேலுமே வைத்தார் 2. அவ்வன்பை மறந்து திரிந்தாலும் எங்குமே அதென்னை தொடர்ந்திடும் மீட்பரின் பாசத்தை நினைக்கவே ஓடுவேன் அன்பரின் கரத்துக்கே 3. மகாராஜன் மகிமை காட்சி காண்பேன் நித்தியம் அவர் மேல் பாடிடுவேன் ஒப்பில்லா ஓரின்ப கீதத்தையே ஆனந்தம் என் நாதர் அன்பு என்றே 4. மீட்பரை அன்பு தான் கொண்டு வந்தே மாளவும் செய்ததே குருசிலே என்னையும் நேசித்தார் நிச்சசயமே இவ்வன்பர் நேசிப்பேன் எந்நாளுமே 5. தேறுதல் அடைந்தேன் நிச்சயத்தால் பாக்கியம் பெறுவேன் நம்பிக்கையால் சாத்தானும் ஓடினான் என்னை விட்டே இயேசுவின் அன்பை நான் கூறவுமே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.