Devane Ummai Naan தேவனே உம்மை நான்
Devane Ummai Naan
தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்
1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
சுத்தமான தண்ணீர் இரசமானதுவே
அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர்
2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்
ருசித்தோர் கூறுவார் இயேசுவே ஆண்டவர்
3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உண்டு
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
உம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.