Boologathaare Yavarum
1. பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களிகூருங்கள்;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்தி, பாட வாருங்கள்.
2. பராபரன் மெய்த் தெய்வமே
நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே
நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.
3. கெம்பீரித்தவர் வாசலை
கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை
கொண்டாடி, துதிசெய்யுங்கள்.
4. கர்த்தர் தயாளர், இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே.
5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற
திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும்
சதா ஸ்துதி உண்டாகவும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.