Saturday, 2 May 2020

Yaarilum Melaana Anbar யாரிலும் மேலான அன்பர்

Yaarilum Melaana Anbar 1. யாரிலும் மேலான அன்பர் மா நேசரே தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர் மா நேசரே மற்ற நேசர் விட்டுப்போவார் நேசித்தாலும் கோபம் கொள்வார் இயேசுவோ என்றென்றும் விடார் மா நேசரே 2. என்னைத் தேடிச் சுத்தஞ் செய்தார் மா நேசரே பற்றிக் கொண்ட என்னை விடார் மா நேசரே இன்றும் என்றும் பாதுகாப்பார் பற்றினோரை மீட்டுக் கொள்வார் துன்ப நாளில் தேற்றல் செய்வார் மா நேசரே 3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு மா நேசரை என்றுமே விடாமல் எண்ணு மா நேசரை எந்தத் துன்பம் வந்தும், நில்லு நேரே மோட்ச பாதை செல்லு இயேசுவாலே யாவும் வெல்லு மா நேசரே 4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம் மா நேசரே சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் மா நேசரே கொண்ட நோக்கம் சித்தி செய்வார் நம்மை அவர் சேர்த்துக் கொள்வார் மோட்ச நன்மை யாவும் ஈவார் மா நேசரே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.