Aarathanai Nayagan Neere ஆராதனை நாயகர் நீரே
Aarathanai Nayagan Neere
ஆராதனை நாயகர் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்
1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன்
2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவும் முடங்கிடவே
மகிழ்வுடன் துதித்திடுவேன்
3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.