Saturday, 30 May 2020
Neer Thantha Nanmai Yavaiyum நீர் தந்த நன்மை யாவையும்
Friday, 29 May 2020
Paavikkai Maritha Yesu பாவிக்காய் மரித்த இயேசு
Paavikkai Maritha Yesu 1. பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார் கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா (3) கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்திச் சிலுவையில் கொன்றோர் இயேசுவைக் காண்பார் திகிலோடு (3) மேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடு அன்று காணப்படுமே பக்தர்கள் மகிழ்ச்சியோடு நோக்குவார்கள் அப்போதே அவர் காயம் (3) தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாக மாந்தர் போற்றச் செய்திடும் ராஜரீகத்தை அன்பாக தாங்கி செங்கோல் செலுத்தும் அல்லேலூயா (3) வல்ல வேந்தே, வந்திடும்.
Thursday, 28 May 2020
Immanuvele Vaarum Vaarume இம்மானுவேலே வாரும் வாருமே
Immanuvele Vaarum Vaarume 1. இம்மானுவேலே வாரும் வாருமே மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உன் ஜனம் பாரில் ஏங்கித்தவிக்கும் மகிழ் மகிழ் சீயோனின் சபையே இம்மானுவேலின் நாள் சமீபமே. 2. ஈசாயின் வேர்த்துளிரே வாருமே பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே பாதாள ஆழம் நின்று ரட்சியும் வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும். 3. அருணோதயமே, ஆ வாருமே வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே மந்தார ராவின் மேகம் நீக்கிடும் இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும். 4. தாவீதின் திறவுகோலே, வாருமே விண் வாசலைத் திறந்து தாருமே ஒடுக்கமாம் நல் வழி காத்திடும் விசாலமாம் துர்ப்பாதை தூர்த்திடும். 5. மா வல்ல ஆண்டவா, வந்தருளும் முற்காலம் சீனாய் மலைமீதிலும் எக்காளம் மின்னலோடு தேவரீர் பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.
Wednesday, 27 May 2020
Geetham Geetham Jaya Jaya Geetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
Geetham Geetham Jaya Jaya Geetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் 1. பார் அதோ கல்லறை மூடின பெருங்கல் புரண்டுருண்டோடுதுபார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம் 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு – ஆ ஆ கீதம் 3. அன்னா காய்பா ஆசாரியர் சங்கம் அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா பூத கணங்கள் இடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார் – ஆ ஆ கீதம் 4. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம் வருகிறார் ஜெயவீரன் - நம் மேள வாத்தியம் கை மணி பூரிகை எடுத்து முழங்கிடுவோம் – ஆ ஆ கீதம்
Gnana Naatha vanam Boomi ஞான நாதா வானம் பூமி
Gnana Naatha vanam Boomi 1. ஞான நாதா வானம் பூமி நீர் படைத்தீர் ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர் வான தூதர் காக்க எம்மை ஊனமின்றி நாங்கள் தூங்க ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர் 2. பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும் சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும் காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும் ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும் 3. நாளில் காரும் ராவில் காரும் ஆயுள் எல்லாம் வாழும் காலம் மா கரத்தால் அமைதியாம் சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து ஆகிடவே தூதர் போன்று, ஆண்டிடவே மாட்சியோடு உம்மோடென்றும்
Monday, 25 May 2020
Ennodirum Maa Nesa Karthare என்னோடிரும் மா நேச கர்த்தரே
Ennodirum Maa Nesa Karthare 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே மற்றோர் சகாயம் அற்றபோதிலும் நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும் கண் கண்ட யாவும் மாறி வாடிடும் மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை வராமல், சாந்தம் தயை கிருபை நிறைந்த மீட்பராக சேர்ந்திடும் நீர் பாவி நேசரே என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும் பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். 5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன் நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும் நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். 6. நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும் சாகையில் விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.
Maa Matchi Karthar மா மாட்சி கர்த்தர்
Maa Matchi Karthar 1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம் நம் கேடகம் காவல் அனாதியானோர் மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர் 2. சர்வ வல்லமை தயை போற்றுவோம் ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம் குமுறும் மின்மேகம் கோபரதமே கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே 3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம் என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம் ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமே மீட்பர் நண்பர் காவலர் சிஷ்டிகரே 4. ஆ, சர்வ சக்தி சொல்லொண்ணா அன்பே மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும் மெய் வணக்கமாய் துதி பாடலோடும்
Sunday, 24 May 2020
Munnorin Deivamam முன்னோரின் தெய்வமாம்
Munnorin Deivamam 1. முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம் அநாதியானோர் அன்பராம் மா யெகோவா சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும் பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே 2. உன்னத பரனை தூய தூதர் சேனை நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார் நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும் மா யெகோவா நம் பிதாவும் துதி ஏற்பார் 3. மீட்புற்ற கூட்டமே மா நாதர் போற்றுமே பிதா சுதன் சுத்தாவிக்கே துதி என்றும் முன்னோர்க்கும் நமக்கும் தெய்வம் ஆனோர்க்கென்றும் வல்லமை மகத்துவமும் உண்டாகவும்
Saturday, 23 May 2020
Uyirthelunthare Alleluya உயிர்தெழுந்தாரே அல்லேலூயா
Uyirthelunthare Alleluya உயிர்தெழுந்தாரே அல்லேலூயா ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென் சொந்தமானாரே 1. கல்லறை திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்ல பிதாவின் செயலிதுவே 2. மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3. எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கினாரே எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4. மரணமுன் கூர் எங்கே பாதாளமுன் ஜெயமெங்கே சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார் சபையோரே துதி சாற்றிடுவோம் 5. ஆவியால் இன்றும் என்றும் ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 6. பரிசுத்தமாகுதலை பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம் எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக எழும்புவோமே மகிமையிலே
Friday, 22 May 2020
Boologathaare Yavarum பூலோகத்தாரே யாவரும்
Boologathaare Yavarum
1. பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களிகூருங்கள்;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்தி, பாட வாருங்கள்.
2. பராபரன் மெய்த் தெய்வமே
நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே
நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.
3. கெம்பீரித்தவர் வாசலை
கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை
கொண்டாடி, துதிசெய்யுங்கள்.
4. கர்த்தர் தயாளர், இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே.
5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற
திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும்
சதா ஸ்துதி உண்டாகவும்.
Thursday, 21 May 2020
Devanbai Kaankirom Aananthamae தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே
Devanbai Kaankirom Aananthamae
1. தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே அவர்தாம் கொடுத்த வேதத்திலே வேதத்தின் மாட்சிமை யாவிலுமே இயேசுவின் அன்புதான் பேரின்பமே ஆனந்தம் இயேசு அன்பு வைத்தார் என் மேலுமே அன்பு வைத்தார் ஆனந்தம் இயேசு அன்பு வைத்தார் என் மேலுமே வைத்தார் 2. அவ்வன்பை மறந்து திரிந்தாலும் எங்குமே அதென்னை தொடர்ந்திடும் மீட்பரின் பாசத்தை நினைக்கவே ஓடுவேன் அன்பரின் கரத்துக்கே 3. மகாராஜன் மகிமை காட்சி காண்பேன் நித்தியம் அவர் மேல் பாடிடுவேன் ஒப்பில்லா ஓரின்ப கீதத்தையே ஆனந்தம் என் நாதர் அன்பு என்றே 4. மீட்பரை அன்பு தான் கொண்டு வந்தே மாளவும் செய்ததே குருசிலே என்னையும் நேசித்தார் நிச்சசயமே இவ்வன்பர் நேசிப்பேன் எந்நாளுமே 5. தேறுதல் அடைந்தேன் நிச்சயத்தால் பாக்கியம் பெறுவேன் நம்பிக்கையால் சாத்தானும் ஓடினான் என்னை விட்டே இயேசுவின் அன்பை நான் கூறவுமேWednesday, 20 May 2020
Sathiya Vedham Baktharin Geetham சத்திய வேதம் பக்தரின் கீதம்
Tuesday, 19 May 2020
Alangara Vaasalale அலங்கார வாசலாலே
Sunday, 17 May 2020
Evvannamaaga Karthae எவ்வண்ணமாக கர்த்தரே
Saturday, 16 May 2020
Yesuve Manalane இயேசுவே மணாளனே
Friday, 15 May 2020
Igathin Thukkam Thunbam இகத்தின் துக்கம் துன்பம்
Opillatha Divya Anbe ஒப்பில்லாத திவ்ய அன்பே
Thursday, 14 May 2020
Vilaintha Palanai Aruppaarillai விளைந்த பலனை அறுப்பாரில்லை
Wednesday, 13 May 2020
Anpin Andavar Varugai அன்பின் ஆண்டவர் வருகை
Tuesday, 12 May 2020
Ulagor Unnai Pagaithalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்
Monday, 11 May 2020
Alleluya Namathandavarai அல்லேலூயா நமதாண்டவரை
Sunday, 10 May 2020
Unnathathin Thoothargalae உன்னதத்தின் தூதர்களே
Saturday, 9 May 2020
Aandava Prasannamagi ஆண்டவா பிரசன்னமாகி
Alleluya Devanuke அல்லேலூயா தேவனுக்கே
Friday, 8 May 2020
Aarathanai Nayagan Neere ஆராதனை நாயகர் நீரே
Thursday, 7 May 2020
Irangumae En Yesuvae இரங்குமே என் இயேசுவே
Wednesday, 6 May 2020
Naan Thoothanaga Vendum நான் தூதனாக வேண்டும்
Unnatha Salame உன்னத சாலேமே
Unnatha Salame
1. உன்னத சாலேமே
என் கீதம், நகரம்
நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்
விண் ஸ்தானமே
கர்த்தா எந்நாள்
உம் திருத் தாள்
சேவிப்பேனே
2. பூவில் தகாரென்றே
தீர்ப்புற்ற நாதனார்
தம் தூதரால் அங்கே
சீர் வாழ்த்தல் பெறுவார்
3. அங்கே பிரயாணத்தை
பிதாக்கள் முடிப்பார்
வாஞ்சித்த பிரபுவை
ஞானியர் காணுவார்
4. தூய அப்போஸ்தலர்
சந்தோஷமாய்க் காண்பேன்
பொன் வீணை வாசிப்பர்
இசை பாடக் கேட்பேன்
5. சீர் ரத்தச் சாக்ஷிகள்
வெள்ளங்கி பூணுவார்
தங்கள் தழும்புகள்
கொண்டு மாண்படைவார்
6. கேதேர் கூடாரத்தில்
இங்கே வசிக்கிறேன்
நல் மோட்ச பாதையில்
உம்மைப் பின்பற்றுவேன்
Tuesday, 5 May 2020
Pani Pola Peyum பனி போல பெய்யும்
Devane Ummai Naan தேவனே உம்மை நான்
Monday, 4 May 2020
Thevan Thantha Valvallavaa தேவன் தந்த வாழ்வல்லவா
Palare Or Nesar பாலரே ஓர் நேசர்
Saturday, 2 May 2020
Yaarilum Melaana Anbar யாரிலும் மேலான அன்பர்
Friday, 1 May 2020
Entrum Karthavudan என்றும் கர்த்தாவுடன்
Deva Prasannam Tharume தேவா பிரசன்னம் தாருமே
Subscribe to:
Posts (Atom)