Tuesday, 31 August 2021

Puthu Kirubai Alithidume புது கிருபை அளித்திடுமே


 

புது கிருபை அளித்திடுமே

புகலிடமும் தந்திடுமே

புது ஜீவன் புது பெலனும்

எந்தன் இயேசுவே தந்திடுமே

 

1.  பரதேசியாகத் திரிந்தேனையா

  பாசமாய்த் தேடினீரே

 இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்

 இயேசுவே இரட்சகனே             

 

2. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்

ஆண்டவர் அன்பினையே

வேண்டாதவைகளை விலக்கிடவே

உந்தன் வழிதனை போதியுமே      

 

3.  உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற

வல்லமை தந்திடுமே

இம்மட்டும் காத்த இம்மானுவேலே

இனியும் நடத்திடுமே              

Monday, 30 August 2021

Aatharam Neerthanaiya ஆதாரம் நீர்தானையா


 


ஆதாரம் நீர்தானையா

காலங்கள் மாற கவலைகள் தீர

காரணம் நீர்தானையா


1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்

கண்டேன் நான் இந்நாள் வரை

ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை

குழப்பம் தான்  நிறைகின்றது– ஆதாரம்


2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை

பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை

ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை

அமைதிதான் கலைகின்றது – ஆதாரம்


3. உந்தனின் சாட்சியாய் வாழ

உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை

உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்

சாட்சியாய் வாழ்ந்திடுவேன் – ஆதாரம்


Sunday, 29 August 2021

Yesu Unnai Alaikirar இயேசு உன்னை அழைக்கிறார்


 

இயேசு உன்னை அழைக்கிறார்

இன்ப தொனி பின் வாராயோ

இன்னல் தீர்க்க வல்லவரை

இன்று நீ நம்பிடுவாய்

 

1. வருந்தி பாரங்கள் சுமந்த நீ

விரும்பி சிலுவை நோக்கியே பார்

அருமை ஆண்டவர் உனக்காக

சிறுமை அடைந்து உயிர் தந்தாரே

 

2. உன் கையில் நீ செய்த பாவத்திற்காய்

தன் கையில் ஆணிகள் பாய்ந்திடவே

முள் முடி சூடினார் உன் வினைக்காய்

மன்னிப்பு இரட்சண்யம் உனக்களிப்பார்

 

3. மனந்திரும்பி நீ மாறினாலோ

மறுபிறப்பை நீ கண்டடைவாய்

இயேசுவை உன் ஆத்ம இரட்சகராய்

ஏற்றுக்கொள் கிடைக்கும் சமாதானமே

 

4. வல்லமை உண்டவர் இரத்தத்திலே

வியாதியின் வேரும் கூரும் முறியும்

கர்த்தரின் காயங்கள் தழும்புகள்

சுத்தமாய் உன்னையும் குணமாக்கிடும்

 

5. சத்திய பரனே அழைக்கிறார்

நித்திய ஜீவனை ஈந்திடுவார்

இயேசுவாலாகாத தொன்றுமில்லை

இப்போதும் உன் தேவை வேண்டிக் கொள்வாய்

Saturday, 28 August 2021

Vaana Pitha Thantha vethathilae வான பிதா தந்த வேதத்திலே


 

1. வான பிதா தந்த வேதத்திலே

  நான் மகிழ்வேன் அன்பு சொல்லுகிறார்

 இவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளே 

ஆச்சர்யம் யேசென்னை நேசிக்கிறார்

 

ஆனந்தம் யேசு நேசிக்கிறார்

நேசிக்கிறார் நேசிக்கிறார்

ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்

 நேசிக்கிறார் என்னையும்.

 

2.  நான் மறந்தோடினும் நேசித்தென்னைச்

சென்ற இடம் வந்து தேடுகிறார்

மீண்டும் நினைந்தவர் நேசந்தன்னை

ஆண்டவர் அண்டுவேன் நேசிக்கிறார்

 

3. நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன்

 மீட்கவந் தாத்துமம் நேசிக்கிறார்

 சாவு மரத்தில் அந் நேசங்கண்டேன்

நிச்சயம் யேசென்னை நேசிக்கிறார்

 

4. நிச்சயத்தால் இன்ப ஓய்வு பெற்றேன்

 நம்பும் என் யேசென்னை வாழ்விக்கிறார்

 யேசென்னை நேசிக்கிறார் என்றேன் நான்

சாத்தான் நில்லா தஞ்சி ஓடக் கண்டேன்

Vanthaalum Yesuvae Vaarumithil வந்தாளும் இயேசுவே வாருமிதில்


 

வந்தாளும் இயேசுவே வாருமிதில்தேவ
மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில்

1.பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே
சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே
இத்தினத்தில் இங்கு வந்திடும்தேவா

2.நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும்
கல்வாரியின் அன்பையின்று கர்த்தனே நீர் காட்டியே
நற்குணம் அவர்க்கு நல்கிடும்தேவா

3.சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும் தூசியும்
கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திடதேவா

4.என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன் உத்தரம்
பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள் காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமேதேவா

5.சதா காலங்களிலும் இருப்பேனுங்கள் கூடவே
சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் மேற்கொள்ளாதென்றீர்
ஆதலாலனந்த ஸ்தோத்திரம்தேவா

Anbe Kalvari Anbe அன்பே கல்வாரி அன்பே


 

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா

1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர்  
பரிகார பலியானீர்

2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா

4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

Thursday, 26 August 2021

Isravelin Thuthikul இஸ்ரவேலின் துதிக்குள்


 

இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே
இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
இறங்கி வந்திடுமே

1. உம் வாசல்களில் துதியோடும்
உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
உம் நாமத்தை ஒருமித்துமே
உயர்த்தியே போற்றுகிறோம்

2. இஸ்ரவேலின் எக்காளம் மகா
ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்
எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்
இப்போ சத்துருவின் கோட்டைகளை
இடித்து தகர்த்திடுவோம்

3. எதைக் குறித்தும் கவலைப்படாமல்
எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள்
என்றீர் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
இப்போ எல்லா புத்திக்கும் மேலான
உம் சமாதானம் ஈந்திடுமே

4. ஆசாரியர் லேவியர் ஒருமித்தும்மை
ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே
ஆலயம் மகிமையால் நிரம்பினது போல
ஆலயமாய் எம்மை பூவில் காண
உம் மகிமையால் நிரப்பிடுமே

5. உம் கிருபையின் மகிமைக்குமே
எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்
எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
எம்மை மீட்கவே முத்தரித்தீரே
எம் ஆவியானவரால்