Saturday, 18 April 2020

Athikaalai Thinam Thedi அதிகாலை தினம் தேடி

Athikaalai Thinam Thedi அதிகாலை தினம் தேடி உம் முகத்தினில் விழித்திடுவேன் புதுக் கிருபை அதைத் தேடி உம் பாதத்தில் அமர்ந்திடுவேன் ஆனந்தம் பேரின்பம் என் அன்பரின் பாதத்திலே ராஜா அல்லேலூயா-என் தேவா அல்லேலூயா 1. கரங்களை விரித்து கர்த்தரைப் பார்த்து காலையில் பணிந்திடுவேன் கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து மகிமையை செலுத்திடுவேன் பாதத்திலே முகம் பதித்து முத்தங்கள் செய்திடுவேன் --- ராஜா 2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட கண்களும் விழித்திடுதே உம் மனம் குளிர என் மனம் பாட ஆயத்தமாகிடுதே உம் வசனம் தியானித்திட என் உள்ளம் காத்திடுதே --- ராஜா 3. கண்ணிமை நேரம் உம்மை மறவாமல் கருத்தாய் நினைத்திடவே கனிவாய் இரங்கி கருனை ஈந்து கரத்தால் அணைத்திடுமே நாள் முழுதும் வல்லமையால் நிதமும் நனைத்திடுமே --- ராஜா

Friday, 17 April 2020

Kalai Neram Inba Jeba Thiyaname காலை நேரம் இன்ப ஜெப தியானமே

Kalai Neram Inba Jeba Thiyaname காலை நேரம் இன்ப ஜெப தியானமே கருணை பொற்பாதம் காத்திருப்பேன் அதிகாலையில் அறிவை உணர்த்தி அன்போடு இயேசு தினம் பேசுவார் 1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன் என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும் என்னை அழைத்தார் அவர் சேவைக்கே 2. பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல் பொய்யாய் சொன்னாலும் களிகூருவாய் இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார் இந்த மெய் வாக்கு நிறைவேறுதே 3. சிலுவை சுமந்தே அனுதினமே சோராமல் என் பின் வா என்றாரே அவரோடு பாடு சகித்தாளுவேனே ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே 4. பறந்து புறா போல் சிறகடித்தே பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன் பரலோக வாசல் பரம சீயோனே பூரித்து என்னை வரவேற்குமே

Thursday, 16 April 2020

Kaalam Kalamaga Ummai காலங் காலமாக உம்மை

Kaalam Kalamaga Ummai காலங் காலமாக உம்மை நான் துதிப்பேன் காலை மாலை தோறும் உம்மையே துதிப்பேன் என்றும் மாறாதவர் இயேசு ராஜன் நீரே மகிமை மகிமை உமக்கென்றுமே 1. சொன்னபடி செய்பவரே சொல்லால் அகிலத்தைப் படைத்தவரே சோர்ந்துப் போகும்போது நீர் சொன்னதை நினைத்தேன் அகமகிழ்ந்தேன் துதித்தேன் துதிப்பேன் துதித்திடுவேன் --- காலங் 2. கண்மணிபோல் காப்பவரே காற்றையும் கடலையும் அதட்டினீரே கலங்கித் தவித்த போது உம்மைக்கண்டேன் கடல்மேல் கலங்கிடேனே துதித்தேன் துதிப்பேன் துதித்திடுவேன் --- காலங் 3. சேற்றிலிருந்து தூக்கினீரே என்னைத்தான் தேடியே வந்தீரே பாதை தவறும் பொது என்னைத்திரும்பிப் பார்த்தீர் கரம் பிடித்தீர் துதித்தேன் துதிப்பேன் துதித்திடுவேன் --- காலங்

Wednesday, 15 April 2020

Naan Unakku Thunai Nirkiren நான் உனக்கு துணை நிற்கிறேன்

Naan Unakku Thunai Nirkiren நான் உனக்கு துணை நிற்கிறேன் என்றவரே ஸ்தோத்திரம் வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே வல்ல தேவனே ஸ்தோத்திரம் 1. பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி அரவணைத்தவரே ஸ்தோத்திரம் - நான் 2. பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பி நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் - நான் 3. சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பி ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் - நான்

Vanathi Vanavar Nam Yesuvai வானாதி வானவர் நம் இயேசுவை

Vanathi Vanavar Nam Yesuvai வானாதி வானவர் நம் இயேசுவை வாத்தியங்கள் முழங்கிட பாடுவோம் தேவாதி தேவன் நம் இயேசுவை நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம் ஹாலேலூயா ஹா ஹாலேலூயா ஹாலேலூயா ஹா ஹாலேலூயா 1. வானங்களை விரித்தவரை பாடுவோம் வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம் 2. வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம் வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் 3. பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே பாசக்கரம் நீட்டி அவர் தூக்கினார் 4. பாரில் வந்த பரலோக நாயகன் பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே

Sunday, 12 April 2020

O Enthan Ullam ஓ எந்தன் உள்ளம்

O Enthan Ullam 1. ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால் என் வாழ்க்கையில் எல்லாம் நிறைந்திருப்பதால் உம்மைத் துதிப்பேன் உம்மைத் துதிப்பேன் இன்றும் என்றும் உம்மை போற்றி பாடித் துதிப்பேன் 2.கண்மணி போல காத்துக் கொள்வதால் உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால் 3. பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால் உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால் 4. ஆவியில் என்னை நிறைத்திருப்பதால் ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்

Saturday, 11 April 2020

Yutha Raja Singam யூத ராஜ சிங்கம்

Yutha Raja Singam யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார் அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் – யூத 6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை – யூத 7. கிறிஸ்தோரே நாம் அவர் பாதம் பணிவோம் பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம் – யூத