Sunday, 12 April 2020

O Enthan Ullam ஓ எந்தன் உள்ளம்

O Enthan Ullam 1. ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால் என் வாழ்க்கையில் எல்லாம் நிறைந்திருப்பதால் உம்மைத் துதிப்பேன் உம்மைத் துதிப்பேன் இன்றும் என்றும் உம்மை போற்றி பாடித் துதிப்பேன் 2.கண்மணி போல காத்துக் கொள்வதால் உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால் 3. பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால் உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால் 4. ஆவியில் என்னை நிறைத்திருப்பதால் ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்

Saturday, 11 April 2020

Yutha Raja Singam யூத ராஜ சிங்கம்

Yutha Raja Singam யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார் அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் – யூத 6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை – யூத 7. கிறிஸ்தோரே நாம் அவர் பாதம் பணிவோம் பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம் – யூத

Yutha Raja Singam யூத ராஜ சிங்கம்


Thursday, 9 April 2020

Oppu Nigar illatha Kalvariye ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே

Oppu Nigar illatha Kalvariye 1. ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே ஒப்புரவை தந்திடும் கல்வாரியே ஒற்றுமையாய் பூவுலகம் ஒரு மிக்க பகை தீர்க்க ஓங்கியே நிற்கின்ற கல்வாரியே கல்வாரியே கல்வாரியே ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே 2. இறையன்பை பகர்ந்தூட்டும் கல்வாரியே இறைவனின் தியாகம் பார் கல்வாரியே இல்லார்க்கும் பொல்லார்க்கும் இயலாத பாவிக்கும் இறையருள் தந்திடும் கல்வாரியே 3. எல்லாரையும் ஏற்கும் கல்வாரியே பொல்லாரை மீட்டிடும் கல்வாரியே என் சாபம் நீக்கிட என் பாவம் போக்கிட நிலை வாழ்வை தந்திடும் கல்வாரியே

Wednesday, 8 April 2020

Kalvari Snegam கல்வாரி சிநேகம்

Kalvari Snegam கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும் குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் (2) கும்பிடுவோரை குணமாக்கும் வேதம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் (2) என்னை காணுவோர் உம்மை காணட்டும் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா நான் சிறுகவும் நீர் பெருகவும் (2) தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்

Thursday, 2 April 2020

Kalvari Katchiyai Kandum கல்வாரி காட்சியை கண்டும்

Kalvari Katchiyai Kandum கல்வாரி காட்சியை கண்டும் கல்நெஞ்சம் கரைந்திடாதோ பாவம் அற்ற பரிசுத்தர் பட்ட பாடுகள் எண்ணி உருகிடாதோ 1. கொடுங் கொல்கதா மலை மேட்டில் கோரப் பாடுகள் சகித்தார் பாரச் சிலுவை தோளில் சுமந்து தள்ளாடியே ஏறுகின்றார் திவ்ய நேசர் எடுத்திட்ட கோலம் எண்ணியே மனம் உருகிடாதோ 2. கை கால்கள் ஆணிகள் பாய திரு ரத்தம் வழிந்தோடுதே முட்கிரீடம் தலையில் குத்த வேதனையால் வாடுகின்றார் திவ்ய நேசர் படும் வேதனையை எண்ணியே மனம் கரைந்திடாதோ 3. ஐங்காயம் ஏற்றிட்ட நாதர் சிலுவையில் தொங்குகின்றார் தீய நிந்தனைகள் ஏற்றார் பரிகாசங்கள் சகித்தார் பாவம் போக்கும் பரிசுத்தர் பாதம் பணிந்தே மனம் கதறிடாதோ

Wednesday, 1 April 2020

Siluvai Oar Punitha Sinnam சிலுவை ஓர் புனிதச் சின்னம்

Siluvai Oar Punitha Sinnam சிலுவை ஓர் புனிதச் சின்னம் ஜெகத்து ரட்சகன் இயேசு மரித்துயிர்த்தெழுந்தார் – சிலுவை 1.கல்வாரியில் முளைத்து ககனம் வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்து இகபரத்தை இணைத்து இல்லாரைச் செல்வராக்கும் பொல்லாரை நல்லோராக்கும் நல்லாயன் இயேசு சுவாமி தோளில் சுமந்து சென்ற --- சிலுவை 2.அலகை சிரமுடைக்க அகந்தை நினைவழிக்க பலமயல்களகற்றப் பவக் கடலைக் கடக்க உலகில் உயிர்களோங்க உன்னத வாழ்வு பெற பலகுல மனிதரும் பகைத்துப்பின் போற்றுகின்ற --- சிலுவை 3.யூதர்க்கிடறலான இயேசு நாதர் சிலுவை கிரேக்க ஞானியருக்கு பைத்தியமச் சிலுவை அன்பர்க் கடைக்கலமும் தேவ பெலனும் சிலுவை தன்னை உணர்ந்தவர் தனிப்பெருமை சிலுவை - சிலுவை