Wednesday, 26 February 2020

Pitha Anbu Selvan பிதா அன்புச் செல்வன்

Pitha Anbu Selvan பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான் பிறை ஒளி முன்னணை புரண்டதே தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன் தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் --- பிதா 1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள் ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள் ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் --- தாழ்மை 2. கனி கடலாக ஆவியினால் தருவான் பகை கலைந்தோட அமுதமொழி அருள்வான் பிறர் கனிந்துயர உடலாவி கொடுப்பான் மனம் கசிந்துருக கோடி துயர் சுமப்பான் --- தாழ்மை 3. கடல் உப்பாக வாழ்ந்துவிடில் இன்பம் பிறர் கண்டு வர ஒளிப்பாதை எழும்பும் விழி தூண்டும் பணி அமைதியுன் சிரிப்பு அதில் துலங்க வரும் தூயோனின் ரட்சிப்பு --- தாழ்மை 4. புவி புல்லரெல்லாம் மாற்றி விடும் புனிதன் வளர் புது மலராய் பூத்த தெய்வ மனிதன் உளம் பூம்பொழிலாய் மாற்ற வந்த கோமான் தேன் பூங்குயிலாய் அறம் பாடும் பூமான் --- தாழ்மை

Kanni Marithaayin Karuvoolane கன்னி மரித்தாயின் கருவூலனே

Kanni Marithaayin Karuvoolane கன்னி மரித்தாயின் கருவூலனே கந்தை உருக்கோலனே மண்ணில் மலர்ந்திட்ட மனுவேலனே மாந்தர்க் கனுகூலனே 1. மார்கழிப் பனியுந்தன் மலர் மஞ்சமோ மயக்கும் இருள் சொந்தமோ மாட்டுத் தொழு உன்னை மகிழ்விக்கும் பந்தலோ மாற்றுத் துணி கந்தலோ மாற்றுக் குறையாத மணித் தங்கமோ மாசு இல் நெஞ்சமோ 2. வாலொடு ஒரு வெள்ளி உதிக்கின்றதே வையம் திகைக் கின்றதே வானத்திரள் கூடி கானங்கள் பாடி வாழ்த்திப் பணி கின்றதே வஞ்சன் ஏரோதின் நெஞ்சத்திலே வன்மம் எழுகின்றதே

Tuesday, 25 February 2020

Paduvom Paduvom Intru பாடுவோம் பாடுவோம் இன்று

Paduvom Paduvom Intru 1. பாடுவோம் பாடுவோம் இன்று பாடி மகிழ்வோம் பாலனாம் இயேசு இன்று பிறந்தார் இந்தப் பாருலகில் இன்று அவதரித்தார் என்று பாடியே மகிழ்ந்திடுவோம் ஆ மகிழ்ந்திடுவோம் இன்று பாடிடுவோம் இயேசு பாலகன் இன்று பிறந்தார் இந்த ஆயர்களின் வாழ்த்து உரைத்திடவே இந்தப் பூவுலகில் உதித்தார் 2. பொன் வெள்ளைப் போளம் தூப வர்க்கத்தோடு மூவர் வந்து பணிந்தனரே இயேசு பாதமதில் தம் சிரசை வைத்து தம்மைத் தாழ்த்தி வணங்கினரே --- ஆ 3. இயேசு நமக்காகவே இவ்வுலகில் வந்தார் இந்தப் பூமியை மீட்டிடவே இன்று உள்ளமதில் அவர் பிறந்து விட்டார் என்று பாடியே மகிழ்ந்திடுவோம் --- ஆ

Itho Vana Rajan இதோ வான ராஜன்

Itho Vana Rajan இதோ வான ராஜன் பூவினில் உதித்தார் மனுவை மீட்டிட்டவே 1. வானம் பூமியும் படைத்தவர் வந்தார் மனு அவதாரமாய் ஜோதிப் பிரகாசனார் பாவி நமக்காக பெத்தலைப் பதியில் பிறந்தார் --- இதோ 2. உயர் தேவனுக்கே மகிமை இன்று பூமியில் சமாதானமே இன்ப கீதங்களும் தூதர் பாடிட ஆயர்கள் அறை கூவி சகிக்க --- இதோ

Friday, 21 February 2020

Alleluya Alleluya அல்லேலூயா அல்லேலூயா

Alleluya Alleluya அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி 1.நான் உயிரோடு இருக்கும் மட்டும் என் தேவனைத் துதிப்பேனே நான் உள்ளளவும் என் இயேசுவையே கீர்த்தனம் பண்ணிடுவேன் - அல்லேலூயா 2.நான் மனிதனை என்றும் நம்பிடேன் அவன் யோசனை அழிந்திடுமே யாக்கோபின் தேவன் என் துணையே என்றென்றும் பாக்கியவான் - அல்லேலூயா 3.என் ஆத்தும தாகம் பெருக என் கட்டுகள் அறுந்திடுமே கர்த்தரின் கரம் என்னை காத்திடுமே என்றென்றும் வாழ்ந்திடுவேன் - அல்லேலூயா 4.கர்த்தர் சதாகாலமும் சீயோனில் அரசாளுவார் தலைமுறை தலைமுறையாம் அவரே இராஜரீகம் பண்ணிடுவார் - அல்லேலூயா

Jathigale Ellorum Kartharai ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

Jathigale Ellorum Kartharai ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள் தேவன் அளித்த நன்மை பெரியதே கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாததே 1. இன்றைத் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட ஈந்தளித்தீர் உந்தன் கிருபை இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம் --- ஜாதிகளே 2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார் சேதமின்றி என்னைக் காத்தாரே ஜீவியப் பாதையில் தேவை தந்து ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார் --- ஜாதிகளே 3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி சாவு பயம் யாவும் போக்கினார் சோதனை வேதனை சூழ்கையில் சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார் --- ஜாதிகளே 4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார் சொந்த பிள்ளையாக மாற்றினார் நாடியே வந்தென்னை ஆதரித்து வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட --- ஜாதிகளே 5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள் வானவரின் வாக்கு மாறாதே நீதியின் சூரியன் தோன்றிடும் நாள் சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை --- ஜாதிகளே

Mavinbam Kondu Nam Devanai மாவின்பம் கொண்டு நம் தேவனை

Mavinbam Kondu Nam Devanai மாவின்பம் கொண்டு நம் தேவனை தேடி ஓடி வா கூவி உன்னை அழைக்கிறோம் புதிய ஆண்டினில்
1. பலவித இக்கட்டுகள் சூழ்ந்து வந்த போதும் பரம பாதை இடறிடாமல் கடந்து வந்தோமே
2. வஞ்சகரின் கொடுமை சொல் வாதித்த வேளையிலும் நெஞ்சம் நீட்டி அன்பு கொண்டு நேர்மை வழி கண்டோம்
3. தன்னிருகை நீட்டி நம்மை அணைத்துக் காத்திட்டார் மன்னாவையும் மா தயவாய் தினமும் ஈந்திட்டார்
4. சென்றாண்டெமின் சேதம் போக்கி சிறப்புக் காணச் செய்த இன்னோராண்டும் இன்பங் கொள்ள எம்மை நடத்தினீர்