Kanden Kalvariyin Katchi
கண்டேன் கல்வாரியின் காட்சி
கண்ணில் உதிரம் சிந்துதே
அன்பான அண்ணல் நம் இயேசு
நமக்காய் பட்ட பாடுகள்
1.பாவ உலகினிலே
ஜீவிக்கும் மானிடரே
பாரும் அவர் உனக்காய்
குருதி சிந்தும் காட்சி
2.கல்வாரி மலை மீதிலே
கள்ளர்கள் மத்தியிலே
சிலுவையில் அறைந்தனரே
எனக்காய் சிந்தும் காட்சி
3.என் ஆத்ம நேசரே
என் இயேசு இன்பரே
என்றும் நான் உமக்காய்
நல் சேவை செய்திடுவேன்
Koodi Meetper Namathil
1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்
ஆ இன்ப, இன்ப ஆலயம்
நல் மீட்பர் கிருபாசனம்
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்
2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார் — ஆ இன்ப
3. சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார் — ஆ இன்ப
4. வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன் — ஆ இன்ப
Kaaviyam Padiduven
காவியம் பாடிடுவேன்
காலமும் வாழ்வினிலே
இயேசுவின் அன்பினையே
இறைமகன் இயேசுவின் அன்பினையே
இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
கீதம் பாடிடுவேன் (2) --- காவியம்
1. சொந்தம் பந்தம் எல்லாம்
வாழ்வில் மாறுமே
நெஞ்சில் வாழும் இயேசு
மாறா தெய்வமே (2)
அதை நினைப்பதினால் நன்றியுடன்
கீதம் பாடிடுவேன் (2)--- காவியம்
2. என்னை தேடி வந்தாய்
அன்பாய் தேவனே
என்றும் என்னை காக்கும்
தெய்வம் இயேசுவே (2)
அதை உள்ளத்திலே உணர்வதினால்
கீதம் பாடிடுவேன்( 2)--- காவியம்
Enthan Vanjai Paralogame
எந்தன் வாஞ்சை பரலோகமே
என்று சேர்ந்திடுவேன்
என் நேசரை என் ராஜனை
என்று நான் கண்டிடுவேன்
1. நேசர் தேசமதில்
என்றும் பேரின்பமே
கண்ணீரெல்லாம் மாறிடுமே
என்றும் ஆனந்தமே --- எந்தன்
2. சாவின் கூர்மை யாவும்
அழிந்து ஒழிந்ததே
சஞ்சலமோ அங்கில்லையே
நேசரை கண்டிடுவேன் --- எந்தன்
3. வீதி பொன் மயமே
பாடியே மகிழுவேன்
இராப்பகலோ அங்கில்லையே
வெளிச்சம் இயேசு தானே --- எந்தன்
4. ஜீவ தண்ணீரினால்
தாகம் தீர்த்திடுவார்
உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
என்று சேர்ந்திடுவேன் --- எந்தன்
5. தேவ அன்பதுவே
நெருக்கி ஏவிடுதே
பிரிக்கவோ ஏதுமில்லை
அன்பரை சேர்ந்திடுவேன் --- எந்தன்