Wednesday, 8 January 2020

Kanden Kalvariyin Katchi கண்டேன் கல்வாரியின் காட்சி

Kanden Kalvariyin Katchi கண்டேன் கல்வாரியின் காட்சி கண்ணில் உதிரம் சிந்துதே அன்பான அண்ணல் நம் இயேசு நமக்காய் பட்ட பாடுகள் 1.பாவ உலகினிலே ஜீவிக்கும் மானிடரே பாரும் அவர் உனக்காய் குருதி சிந்தும் காட்சி 2.கல்வாரி மலை மீதிலே கள்ளர்கள் மத்தியிலே சிலுவையில் அறைந்தனரே எனக்காய் சிந்தும் காட்சி 3.என் ஆத்ம நேசரே என் இயேசு இன்பரே என்றும் நான் உமக்காய் நல் சேவை செய்திடுவேன்

Kartharin Panthiyil Vaa கர்த்தரின் பந்தியில் வா

Kartharin Panthiyil Vaa கர்த்தரின் பந்தியில் வா சகோதரா கர்த்தரின் பந்தியில் வா கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி - கர்த்தரின் 1. ஜீவ அப்பம் அல்லோ கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ பாவ மனங் கல்லோ உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட - கர்த்தரின் 2. தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு ராப்போசன பந்திதனில் சேரு சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே - கர்த்தரின் 3. அன்பின் விருந்தாமே கர்த்தருடன் ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமே இருதயம் சுத்த திடனாமே இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்

Monday, 6 January 2020

Koodi Meetper Namathil கூடி மீட்பர் நாமத்தில்

Koodi Meetper Namathil 1. கூடி மீட்பர் நாமத்தில் அவர் பாதம் பணிவோம் யேசுவை இந் நேரத்தில் கண்டானந்தம் அடைவோம் ஆ இன்ப, இன்ப ஆலயம் நல் மீட்பர் கிருபாசனம் கண்டடைவோம் தரிசனம் இன்ப இன்ப ஆலயம் 2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய் கெஞ்சும் போது வருவார் வாக்குப் போல தயவாய் ஆசீர்வாதம் தருவார் — ஆ இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும் கேட்பதெல்லாம் தருவார் வாக்குப்படி என்றைக்கும் யேசு நம்மோடிருப்பார் — ஆ இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம், அருள் கண்ணால் பாருமேன் காத்துக் கொண்டிருக்கிறோம், வல்ல ஆவி வாருமேன் — ஆ இன்ப

Kaaviyam Padiduven காவியம் பாடிடுவேன்

Kaaviyam Padiduven காவியம் பாடிடுவேன் காலமும் வாழ்வினிலே இயேசுவின் அன்பினையே இறைமகன் இயேசுவின் அன்பினையே இதயமெல்லாம் மகிழ்ந்திடவே கீதம் பாடிடுவேன் (2) --- காவியம் 1. சொந்தம் பந்தம் எல்லாம் வாழ்வில் மாறுமே நெஞ்சில் வாழும் இயேசு மாறா தெய்வமே (2) அதை நினைப்பதினால் நன்றியுடன் கீதம் பாடிடுவேன் (2)--- காவியம் 2. என்னை தேடி வந்தாய் அன்பாய் தேவனே என்றும் என்னை காக்கும் தெய்வம் இயேசுவே (2) அதை உள்ளத்திலே உணர்வதினால் கீதம் பாடிடுவேன்( 2)--- காவியம்

Sunday, 5 January 2020

Vallamai Arul Niraive Varum வல்லமை அருள் நிறைவே வாரும்

Vallamai Arul Niraive Varum வல்லமை அருள் நிறைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே தேவ ஆவியே தாகம் தீருமே வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே 1. புது எண்ணெய் அபிஷேகம் புது பெலன் அளித்திடுமே நவ மொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே --- வல்லமை 2. உலர்ந்திடும் எலும்புகளும் உயிர் பெற்று எழும்பிடவே எழுப்புதலை கண்டிடவே வல்லமை அளித்திடுமே --- வல்லமை 3. அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே சத்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே --- வல்லமை 4. தூய நல் ஆவிதனை துக்கமும் படுத்தாமல் தூய வழி நடந்திடவே பெலன் தந்து காத்திடுமே --- வல்லமை 5. சத்திய ஆவியே நீர் நித்தமும் நடத்திடுமே முத்திரையாய் அபிஷேகியும் ஆவியின் அச்சாரமாய் --- வல்லமை 6. பெற்ற நல் ஆவிதனை காத்திட வரம் தாரும் ஆவியினால் நடந்திடவே ஆளுகை செய்திடுமே --- வல்லமை

Saturday, 4 January 2020

Kalaiyum Malai Evvaelaiyum காலையும் மாலை எவ்வேளையும்

Kalaiyum Malai Evvaelaiyum காலையும் மாலை எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர் பாடிடும் தொனி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் — காலையும் 2. எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன்; எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் — காலையும் 3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன் — காலையும் 4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில் தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து உயர்த்துவார் கன்மலைமேல் — காலையும் 5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று என் கர்த்தர் சொன்னதினாலே தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு தயவாகப் பதிலளிப்பார் — காலையும் 6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என் கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார் எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே என்றென்றும் காத்திருக்கும் — காலையும் 7. எனக்காக யாவும் செய்து முடிப்பார் என் கர்த்தர் வாக்கு மாறிடார் தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார் — காலையும்

Thursday, 2 January 2020

Enthan Vanjai Paralogame எந்தன் வாஞ்சை பரலோகமே

Enthan Vanjai Paralogame எந்தன் வாஞ்சை பரலோகமே என்று சேர்ந்திடுவேன் என் நேசரை என் ராஜனை என்று நான் கண்டிடுவேன் 1. நேசர் தேசமதில் என்றும் பேரின்பமே கண்ணீரெல்லாம் மாறிடுமே என்றும் ஆனந்தமே --- எந்தன் 2. சாவின் கூர்மை யாவும் அழிந்து ஒழிந்ததே சஞ்சலமோ அங்கில்லையே நேசரை கண்டிடுவேன் --- எந்தன் 3. வீதி பொன் மயமே பாடியே மகிழுவேன் இராப்பகலோ அங்கில்லையே வெளிச்சம் இயேசு தானே --- எந்தன் 4. ஜீவ தண்ணீரினால் தாகம் தீர்த்திடுவார் உள்ளமெல்லாம் ஏங்கிடுதே என்று சேர்ந்திடுவேன் --- எந்தன் 5. தேவ அன்பதுவே நெருக்கி ஏவிடுதே பிரிக்கவோ ஏதுமில்லை அன்பரை சேர்ந்திடுவேன் --- எந்தன்